இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! பதிவினை கண்டு , படித்த பின்னர் கந்தர் அநுபூதி படிக்க வேண்டும் என்று தோன்றியது . அதன் பொருட்டு . தினமும் தொடர்ந்து 51 நாட்கள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாடலாக படிக்க உள்ளோம் . இதில் கௌமாரம் இணைய தளத்தில் இருந்து பதவுரை சேர்த்தும் படிக்க உள்ளோம் . இன்னும் இன்னும் விளக்கவுரை குருவின் அருளால் பெற்று படிப்போம் . பாடலை முதலில் நன்கு படித்து பின்னர் விளக்கத்திற்கு செல்வோம் . இனி 51 நாட்களும் கந்தப் பெருமானின் அருள்மழையில் நனைவோம் .
(மனை மக்கள் எனும் மாயை அகல அருள்வாய்)
வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.
......... பதவுரை .........
கிளை பட்டு எழு ... சுற்றத்தினர் சூழ போருக்கு எழுந்த,
சூர் உரமும் ... சூரபத்மனின் மார்பையும்,
கிரியும் ... கிரவுஞ்ச மலையையும்,
தொளை பட்டு உருவ ... தொளைத்து ஊடுறுவிப் போகும்படி,
தொடு வேலவனே ... தொடுத்த வேலாயுதத்தை உடையவனே,
வளை பட்ட கை ... வளையளை அனிந்த கைகளை உடைய
மாதோடு ... மனைவியுடன்,
மக்கள் எனும் ... மக்களும் (பிற செல்வம், உறவினர்) என்று
கூறப்படுகின்ற
தளை பட்டு அழிய ... அடியேன் கட்டுண்டு அழிவது,
தகுமோ தகுமோ ... முறையோ முறையோ (முறை ஆகாது)
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment