இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! பதிவினை கண்டு , படித்த பின்னர் கந்தர் அநுபூதி படிக்க வேண்டும் என்று தோன்றியது . அதன் பொருட்டு . தினமும் தொடர்ந்து 51 நாட்கள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாடலாக படிக்க உள்ளோம் . இதில் கௌமாரம் இணைய தளத்தில் இருந்து பதவுரை சேர்த்தும் படிக்க உள்ளோம் . இன்னும் இன்னும் விளக்கவுரை குருவின் அருளால் பெற்று படிப்போம் . பாடலை முதலில் நன்கு படித்து பின்னர் விளக்கத்திற்கு செல்வோம் . இனி 51 நாட்களும் கந்தப் பெருமானின் அருள்மழையில் நனைவோம் .
பாடல் 1 ... ஆடும் பரி, வேல்
ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.
......... பதவுரை .........
தேடும் ... அக்ரமாக சான்றோர்களை அழிப்பதற்காக தேடுகின்ற,
கயமாமுகனை ... கஜமுகாசுரனை,
செருவில் சாடும் ... போர் செய்து அழித்த,
தனியானை ... ஒப்பற்ற விநாயகப் பெருமானின்,
சகோதரனே ... தம்பியே,
ஆடும் பரி ... பிரணவ நடனமாடும் மயில்,
வேல் ... உன்னுடைய ஞானா சக்தியாகிய வேலாயுதம்,
அணி சேவல் ... அடியார்களுக்கு முருகனின் அருளைத் தெரிவிக்கின்ற
சேவல் (இவை மூன்றையும்)
பாடும் பணியே ... துதித்துப் பாடுகின்ற தொழிலையே
பணியா அருள்வாய் ... என்னுடைய கடமையாக நீ அருள வேண்டும்.
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment