இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! பதிவினை கண்டு , படித்த பின்னர் கந்தர் அநுபூதி படிக்க வேண்டும் என்று தோன்றியது . அதன் பொருட்டு . தினமும் தொடர்ந்து 51 நாட்கள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாடலாக படிக்க உள்ளோம் . இதில் கௌமாரம் இணைய தளத்தில் இருந்து பதவுரை சேர்த்தும் படிக்க உள்ளோம் . இன்னும் இன்னும் விளக்கவுரை குருவின் அருளால் பெற்று படிப்போம் . பாடலை முதலில் நன்கு படித்து பின்னர் விளக்கத்திற்கு செல்வோம் . இனி 51 நாட்களும் கந்தப் பெருமானின் அருள்மழையில் நனைவோம் .
(சும்மா இரு சொல் அற)
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.
......... பதவுரை .........
செம் மான் ... செவ்விய மானின் புதல்வியாகிய வள்ளியம்மையாரை,
திருடும் திருடன் ... வள்ளி புனத்தில் இருந்து கவர்ந்து சென்ற
கள்வனும்,
பெம்மான் ... மிகப் பெரியவனும்,
பிறவான் இறவான் ... பிறப்பும் இறப்பும் இல்லாதவனும்
ஆகிய முருகன்,
சொல் அற சும்மா இரு ... சொல் ஒழித்து மெய்ஞான உணர்வு
பெற்று மோன நிலை அடைந்து இருப்பாய்,
என்றலும் ... என்று உபதேசித்தவுடன்,
பொருள் ஒன்றும் அறிந்திலனே ... அவனை அன்றி வேறு ஒரு
உலகம் ஒன்றையும் அறியாது நின்றேன்,
அம்மா ... இது என்ன ஆச்சரியம்.
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment