இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! பதிவினை கண்டு , படித்த பின்னர் கந்தர் அநுபூதி படிக்க வேண்டும் என்று தோன்றியது . அதன் பொருட்டு . தினமும் தொடர்ந்து 51 நாட்கள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாடலாக படிக்க உள்ளோம் . இதில் கௌமாரம் இணைய தளத்தில் இருந்து பதவுரை சேர்த்தும் படிக்க உள்ளோம் . இன்னும் இன்னும் விளக்கவுரை குருவின் அருளால் பெற்று படிப்போம் . பாடலை முதலில் நன்கு படித்து பின்னர் விளக்கத்திற்கு செல்வோம் . இனி 51 நாட்களும் கந்தப் பெருமானின் அருள்மழையில் நனைவோம் .
(ஈகையும் தியானமும் நம்மைக் காக்கும்)
கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.
......... பதவுரை .........
மனனே ... ஏ மனமே,
கெடுவாய் ... நீ கெட்டு வீணே ஒழிகின்றாய்,
கதி கேள் ... நீ உய்யும் வழியைக் கூறுகின்றேன் கேட்பாயாக,
கரவாது இடுவாய் ... இரப்பவர்களுக்கு ஒளிக்காமல் தானம்
செய்வாயாக,
வடிவேல் இறை தாள் நினைவாய் ... வேலாயுதக்கடவுளின்
திருவடிகளைத் தியானிப்பாயாக,
நெடு வேதனை ... நீண்ட பிறவித் துன்பத்தை,
தூள் படவே சுடுவாய் ... பொடியாக்கி ஞானாக்கினியால்
சுட்டு எரிப்பாயாக
வினையாவையும் விடுவாய் விடுவாய் ... வினைகள் யாவையும்
விட்டு விடுவாய்
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment