இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! பதிவினை கண்டு , படித்த பின்னர் கந்தர் அநுபூதி படிக்க வேண்டும் என்று தோன்றியது . அதன் பொருட்டு . தினமும் தொடர்ந்து 51 நாட்கள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாடலாக படிக்க உள்ளோம் . இதில் கௌமாரம் இணைய தளத்தில் இருந்து பதவுரை சேர்த்தும் படிக்க உள்ளோம் . இன்னும் இன்னும் விளக்கவுரை குருவின் அருளால் பெற்று படிப்போம் . பாடலை முதலில் நன்கு படித்து பின்னர் விளக்கத்திற்கு செல்வோம் . இனி 51 நாட்களும் கந்தப் பெருமானின் அருள்மழையில் நனைவோம் .
(உறவினர் அழப் போகா வகை உபதேசம் பெற்றது)
கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே.
......... பதவுரை .........
நாகாசல ... திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியவரே,
வேலவ ... வேலாயுதக் கடவுளே,
நாலு கவி த்யாகா ... நாலு விதக் கவிகளை பாடும் திறமையைத்
தந்தவரே,
சுரலோக சிகாணியே ... தேவலோகத்திற்கு சிகாமணியாக
விளங்குபவரே,
என் கிளை கூடி ... என் சுற்றத்தார் ஒன்று கூடி,
கூகா என அழ ... கூகா என ஓலமிட்டு அழும்படிக்கு,
போகா வகை ... இறந்து போகாத வண்ணம்,
மெய்ப் பொருள் போசியவா ... உண்மையான பொருளை
அடியேனுக்கு உபதேசித்த அற்புதந்தான் என்னே
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment