இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! பதிவினை கண்டு , படித்த பின்னர் கந்தர் அநுபூதி படிக்க வேண்டும் என்று தோன்றியது . அதன் பொருட்டு . தினமும் தொடர்ந்து 51 நாட்கள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாடலாக படிக்க உள்ளோம் . இதில் கௌமாரம் இணைய தளத்தில் இருந்து பதவுரை சேர்த்தும் படிக்க உள்ளோம் . இன்னும் இன்னும் விளக்கவுரை குருவின் அருளால் பெற்று படிப்போம் . பாடலை முதலில் நன்கு படித்து பின்னர் விளக்கத்திற்கு செல்வோம் . இனி 51 நாட்களும் கந்தப் பெருமானின் அருள்மழையில் நனைவோம் .
(மங்கையர் மையல் தூரத்தேக)
மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, ஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல, நிர்பயனே.
......... பதவுரை .........
சயிலத்து ... கிரவுஞ்ச கிரியின் மீது,
தட்டு ஊடு அற ... தடைகள் இன்றி ஊடுறுவிச் செல்லும்படி
வேல் எறியும் ... வேலாயுத்தை ஏவி,
நிட்டூர ... அழித்தவனே,
நிராகுல ... துன்பம் இல்லாதவனே,
நிர்பயனே ... பயமற்றவனே,
மட்டு ஊர் குழல் ... தேன் சிந்தும் மலர்கள் அணிந்த கூந்தலை உடைய,
மங்கையர் ... பெண்களது,
மையல் வலை பட்டு ... மோக வலையில் அகப்பட்டு,
ஊசல் படும் பரிசு ... ஊஞ்சல் ஆடுவதுபோல் உள்ளம் ஆடுகின்ற
தன்மையை,
என்று ஒழிவேன் ... எப்போது நீங்கப் பெறுவேன்?
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment