இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! பதிவினை கண்டு , படித்த பின்னர் கந்தர் அநுபூதி படிக்க வேண்டும் என்று தோன்றியது . அதன் பொருட்டு . தினமும் தொடர்ந்து 51 நாட்கள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாடலாக படிக்க உள்ளோம் . இதில் கௌமாரம் இணைய தளத்தில் இருந்து பதவுரை சேர்த்தும் படிக்க உள்ளோம் . இன்னும் இன்னும் விளக்கவுரை குருவின் அருளால் பெற்று படிப்போம் . பாடலை முதலில் நன்கு படித்து பின்னர் விளக்கத்திற்கு செல்வோம் . இனி 51 நாட்களும் கந்தப் பெருமானின் அருள்மழையில் நனைவோம் .
(மாயை அற)
மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.
......... பதவுரை .........
மக மாயை ... வல்லமை மிக்க பெரிய மாயைகளை எல்லாம்,
களைந்திட வல்ல ... நீக்க வல்லவராகிய,
பிரான் ... உயிர்களைவிட்டு பிரியாதவராகிய முருகப் பிரான்,
முகம் ஆறும் ... தன் வாயினால் வழிகளை (உபதேசங்களை),
மொழிந்தும் ... தந்து அருளிய போதிலும்,
அகம் ... வீடு,
மாடு ... பொன் (செல்வம்),
மடந்தையர் என்று ... மாதர் என்று இவைகளை சதா நினைத்து,
அயரும் ... சோர்வு அடையச் செய்கிற,
சக மாயை உள் நின்று ... உலக மாயைக்குள் கிடந்து,
தயங்குவது ஒழிந்திலனே ... கலங்குவதை நான் விடவில்லையே.
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment