இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! பதிவினை கண்டு , படித்த பின்னர் கந்தர் அநுபூதி படிக்க வேண்டும் என்று தோன்றியது . அதன் பொருட்டு . தினமும் தொடர்ந்து 51 நாட்கள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாடலாக படிக்க உள்ளோம் . இதில் கௌமாரம் இணைய தளத்தில் இருந்து பதவுரை சேர்த்தும் படிக்க உள்ளோம் . இன்னும் இன்னும் விளக்கவுரை குருவின் அருளால் பெற்று படிப்போம் . பாடலை முதலில் நன்கு படித்து பின்னர் விளக்கத்திற்கு செல்வோம் . இனி 51 நாட்களும் கந்தப் பெருமானின் அருள்மழையில் நனைவோம் .
பாடல் 3 ... வானோ? புனல் பார்
(ஆறுமுகமான பொருள் எது?)
வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே.
......... பதவுரை .........
சண்முகனே ... ஆறுமுகக் கடவுளே,
பொருளாவது ... நித்தய அழிவில்லாத பொருள் என்பது (எது?)
வானோ ... ஆகாயமோ?,
புனல் ... தண்ணீரோ?,
பாரோ ... நிலமோ?,
கனலோ ... நெருப்போ?,
மாருதமோ ... காற்றோ?,
ஞானோதயமோ ... அறிவு தோன்றும் இடமோ?,
நவில் நான் மறையோ ... ஓதப்படும் நான்கு வேதங்களோ?,
யானோ ... நான் என்கிற தத்துவமோ?,
மனமோ ... மனமோ?,
எனை ஆண்ட இடம் தானோ ... என்னை ஆட்கொண்ட இடம் தானோ?
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment