இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! பதிவினை கண்டு , படித்த பின்னர் கந்தர் அநுபூதி படிக்க வேண்டும் என்று தோன்றியது . அதன் பொருட்டு . தினமும் தொடர்ந்து 51 நாட்கள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாடலாக படிக்க உள்ளோம் . இதில் கௌமாரம் இணைய தளத்தில் இருந்து பதவுரை சேர்த்தும் படிக்க உள்ளோம் . இன்னும் இன்னும் விளக்கவுரை குருவின் அருளால் பெற்று படிப்போம் . பாடலை முதலில் நன்கு படித்து பின்னர் விளக்கத்திற்கு செல்வோம் . இனி 51 நாட்களும் கந்தப் பெருமானின் அருள்மழையில் நனைவோம் .
பாடல் 10 ... கார் மா மிசை
(காலன் அணுகாமல் காத்திடுவான் கந்தன்)
கார் மா மிசை காலன் வரில், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப, வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே.
......... பதவுரை .........
தார் மார்ப ... மலர் மாலையணிந்த திரு மார்பினரே,
வலாரி தலாரி எனும் ... வலன் என்ற அசுரனை அழித்த
இந்திரனுடைய பொன்னுலகை அழித்த,
சூர் மா மடிய தொடு ... சூரனாகிய மாமரம் அழியும்படி
செலுத்திய,
வேலவனே ... வேலாயுதக் கடவுளே,
கார் மா மிசை ... கரிய எருமையின் மீது,
காலன் வரில் ... காலன் வரும்போது,
கலபத்து ஏர் மா மிவை வந்து ... அழகிய தோகையை உடைய
மயில் வாகனத்தில் எழுந்தருளி,
எதிரப் படுவாய் ... அடியேன் எதிரே வந்தருள்வீராக
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment