இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! பதிவினை கண்டு , படித்த பின்னர் கந்தர் அநுபூதி படிக்க வேண்டும் என்று தோன்றியது . அதன் பொருட்டு . தினமும் தொடர்ந்து 51 நாட்கள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாடலாக படிக்க உள்ளோம் . இதில் கௌமாரம் இணைய தளத்தில் இருந்து பதவுரை சேர்த்தும் படிக்க உள்ளோம் . இன்னும் இன்னும் விளக்கவுரை குருவின் அருளால் பெற்று படிப்போம் . பாடலை முதலில் நன்கு படித்து பின்னர் விளக்கத்திற்கு செல்வோம் . இனி 51 நாட்களும் கந்தப் பெருமானின் அருள்மழையில் நனைவோம்.
(மனதிற்கு உபதேசம்)
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே.
......... பதவுரை .........
மனனே ... ஏ மனமே,
மெய் ... உடம்பு,
வாய் ... வாய்,
விழி ... கண்,
நாசி ... மூக்கு,
செவியாம் ... காது ஆகிய,
ஐவாய் வழி செல்லும் அவா வினையே ... ஐம் பொறிகளின் வழியே
செல்லும் ஆசைகளை,
ஒழிவாய் ஒழிவாய் ... முற்றிலும் ஒழித்து விடு (அதனால்),
கைவாய் கதிர் வேல் ... திருக் கரத்தில் விளங்கும் ஒளிவீசும்
வேலாயுதத்தை உடைய,
முருகன் கழல் பெற்று ... முருகப் பெருமானின் திருவருளைப் பெற்று,
உய்வாய் ... உயர்வு பெற்று வாழ்வாய்.
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment