"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, October 9, 2019

நலமெல்லாம் சேர்க்குமே கூடுவாஞ்சேரிக் குமிழி!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஒவ்வொரு ஆலய தரிசனமும் நமக்கு ஒவ்வொரு வகையில் சிறப்பாக அமைகின்றது. சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பூர் பெருமாள் கோயில் பற்றி நமக்கு உரைக்கப்பட்டது. ஆனால் பெருமாள் என்று அழைப்பாரோ? என்று தான் நமக்கு தோன்றியது. ஏன்? எதற்கு என்று ஆராய்ந்து பார்த்தால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அது போன்று தான் ஆப்பூர் பெருமாள் நம்மை வெறும் தரிசனத்திற்காக அழைக்காது, நம் குழுவை அப்படியே அழைத்து உழவாரப் பணி தந்து அன்று ஒரு நாள் ஆன்மிக யாத்திரை மேற்கொள்ள அருளினார். இது தான் காரணமின்றி காரியமில்லை என்பது. அது போல் தான் இந்த தரிசனப் பதிவும் அமைய இருக்கின்றது.

அன்றும் அப்படியே வீட்டிலிருந்து சில கோயில்களுக்கு செல்ல தீர்மானித்து , கூடுவாஞ்சேரியில் உள்ள மற்றொரு அகத்தீஸ்வரர் தரிசனம் பெற்று, அடுத்து சுந்தரர் குருபூசை பற்றி பேச, திருக்கச்சூர் செல்லலாமா? என்று யோசித்து இல்லை ..நெடுங்காலமாக நம் மனதில் உள்ள குமிழி கோயிலுக்கு செல்ல உள்ளுணர்வு உந்தியது. உடனே கூடுவாஞ்சேரியில் இருந்து குமிழி நோக்கி புறப்பட்டோம்.



செல்லும் பாதை கரடு முரடாக இருந்தது. நமக்கு ஒரு நொடி தூக்கி வாரிப்போட்டது. சரியாக தான் குமிழி கோயில் நோக்கி சென்று கொண்டு இருக்கின்றோமா என்று?



இப்படி ஒரு பாதையில் தான் சென்றோம். சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த ஆலயம் பற்றி நாம் அறிந்தோம்.


ஆலயத்தை அடைந்ததும் ஆன்ம விரிவு அடைந்தோம். நீங்களே பாருங்களேன்.


கோயில் மிக மிக புதுமையாக இருந்தது.

பிறவிப் பெருங்கடலில் நிலைத்து உழலும் ஆன்ம கோடிகள் உய்யும் பொருட்டு தம் இயல்பான
கருணையினால் திரு உருவத் திருமேனி தாங்கி அருள் விளக்கம் செய்யும் ஆலயங்கள் பல.

அவைகளுள் ஒன்றாக மூலிகை மலைகளால் சூழப்பட்ட (முக்கண் போல மலைகள்) இத்திருக் கோயிலின்மத்தியில் உள்ள குளத்தில் நீராடுவதாலும் குளத்து மண்ணினை பூசுவதாலும் சர்வ ரோக நிவாரணராக,வேண்டிய பக்தர்களுக்கு வேண்டியதை 1200 ஆண்டுகளுக்கு மேலாக அருள்பாலித்து வரும் இந்தசிவாலயத்தில் மிகவும் விசேஷமாக வேறெங்கும் காண முடியாத அற்புத திருக்காட்சியாக விஸ்வவிருட்சமே லிங்கத் திருமேனிக் குடையாக சூழ்ந்துள்ளதாகும்
 ஸ்ரீ வேதகிரீஸ்வரர் திருக்கோயில், குமிழி.

ஸ்தல புராணம்

கூடுவாஞ்சேரியில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சாலையில் 9 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். அடர்ந்த வனத்தின் இடையே அமைதி சூழ்ந்த அழகுடன் அருள்மிகு திரிபுர சுந்தரி சமேத ஸ்ரீ வேதகிரிஸ்வரர் அருள் பாலிக்கின்றார்.

"மூன்று கிரி சூழவே மூண்ட வனத்திடை
தோன்றிய வேதகிரிஸ்வரரை - வேண்டியே
நாடுவோர் வாழ்வில் நலமெல்லாம் சேர்க்குமே
கூடுவாஞ்சேரிக் குமிழி!"

சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட சிவலிங்கத்துடன் அமைந்த இக்கோயில் நாளடைவில் காட்டுச்செடிகளாலும் கொடிகளாலும் சூழப்பட்டு சிதிலமடைந்திருந்தது. இவ்வூரில் வாழ்ந்த அந்தணர் ஒருவர் பெருநோயால் பாதிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அல்லலுற்று வந்தார். தனது மூன்று கன்னிப் பெண்களை கல்யாணக் கரையேற்ற முடியாமல் திருமணத் தடையால் செய்வதறியாது வாழ்ந்திருந்த வேளையில் வழிபோக்கராக வந்த ஒரு சிவனடியார்... அவரைக் கண்டு, வனத்தில் மறைந்துள்ள வேதகிரிஸ்வரரை வணங்கி அங்குள்ள சரோணி குளத்தில் குளித்தெழுந்து, அதன் சேற்றை பூசுமாறு நல்வாக்கு சொல்ல, அதன்படியே புதர் மண்டிய வனத்தில் அந்தணரும் சென்று சரோணி தடாகத்தில் குளித்தெழுந்து ஸ்ரீ வேதகிரிஸ்வரரை வணங்கி வேண்டி வந்தார். ஒரு திந்களுக்குள் நிகழ்ந்தது அதிசயம். அந்தணரின் பெருநோய் ரணங்கள் முற்றிலும் குணமாகி புதிய பொலிவுடன் முன்போல் தோற்றம் கொண்டு தனது மூன்று மகள்களுக்கும் திருமணத்தடை நீங்கி நல்ல இடங்களில் சம்பந்தம் அமைய, தனது கடமையை நிறைவேற்றி பேரானந்தம் கொண்டார். வேதகிரிஸ்வரரின் மகிமைகளை ஊரெங்கும் போற்றிப் புகழ்ந்தார். கேள்விப்பட்ட மக்கள் திரள்திரளாக சரோணி தடாகத்தின் சேற்றை பூசி ஸ்ரீ வேதகிரிஸ்வரரை உருகி வணங்கி நலமடைந்தனர்.

"சேறும் மருந்தாகும், தண்ணீரும் விருந்தாகும்
ஊறும் நோய்நொடிகள் ஓடிப்போகும் -
வேதகிரிஸ்வரரை வணங்கினால்"

காட்டுத் தாவரங்களால் காலம் மறைந்திருந்த இத்திருக்கோயில் காக்கும் ஈசனின் அருளால், வாசு அவர்களின் கனவில் கண்டெடுக்கப்பட்டு, மீண்டும் புனரமைக்கப்பட்டு, மிக அழகான தோற்றப் பொலிவுடன் மக்கள் வணங்கி பயன்பெறும் வண்ணம் தனது சொந்த செலவில் வடிவமைத்துள்ளார். "சரோணி தடாகம்" எனும் இத்திருக்குளம் கோடையிலும் வற்றாது குளிர்நீர் நிறைந்தது. சுனைகளில் வடியும் சுவையான நீர்சுரப்பும், இயற்கை வனப்பும் சிவனருளால் காண்போர் மனங்களில் தெய்வீகம் கமழச்செய்யும், மூன்றுபக்க மும்மலைசூழ், மருதத்தென்றல் குளிர்வீச, வற்றாக்கிணறு ஒன்று வருவோரின் தாகம் தீர்க்கின்றது. கருவறையில் லிங்கவடிவில் ஸ்ரீ வேதகிரிஸ்வரரும் அதனருகில் சாந்த சொரூபமாக ஸ்ரீ திரிபுரசுந்தரியும் காட்சிதர, வில்வமரமும் வன்னிமரமும் தலவிருட்சங்களாய் நிழல்விரிக்கின்றன. செவ்வாய் கிழமை - வெள்ளி கிழமைகளில் விசேஷ பூஜையும் ஒவ்வொரு பௌர்ணமி நாளில் கிரிவலமும் நடைபெறுகிறது. திருக்கோயிலின் முகப்பில் நுழைந்த உடன் வலம்புரி விநாயகர் 18 அடி உயரத்தில் காட்சி தருகிறார்.

அவரைச் சுற்றி நான்கு பக்கமும் வலம்புரி இடம்புரி நர்த்தன பஞ்சமுக கணபதியும் உள்ளனர். பொன் நிறத்து ஆஞ்சநேயர் புன்னகைத்து வணங்கி நிற்க ஸ்ரீதேவி, பூதேவி உடனுரை ஸ்ரீநிவாசப் பெருமாளும், கருட ஆழ்வார், தத்தாத்ரேயர், காலபைரவர், நவக்கிரகங்கள் மற்றும் சந்திரன், குரு, சூரியன் ஆகியோரும் தனித்தனி சந்நிதிகளுடன் விளங்குகின்றனர். ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீசரஸ்வதி சந்நிதிகளுடன் காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, மகாகாளி, ஆகியோருடன் இத்திருக்கோயிலில் காட்சி தருகின்றனர்.

அத்தி மற்றும் வேப்ப மரத்தடியில் நாகப்புற்றுடன் பாளையத்தம்மன் கொலுவீற்றிருக்க, அஷ்டபுஜ துர்கையும், லக்ஷ்மி கணபதியும், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யரும், சபரிமலை சாஸ்தாவும் கோயில் கொண்டுள்ளார். தெய்வங்கள் மட்டுமல்லாது தேவாரம் பாடிய நால்வருக்கும், 18 சித்தர்களுக்கும், ஏழு சப்த கன்னிகளுக்கும், தனித்தனி சந்நிதிகள் உள்ளன. அத்திமரம், அரசமரம், வேப்பமரம், வில்வமரம், வன்னிமரம் என்று வெயில் தரை விழாத வண்ணம் நிழல் கம்பளம் விரித்திருக்கிறது இயற்கை. கும்பிடும் குலதெய்வங்கள் எல்லாம் ஒரே கோயிலில் அருள் புரிவது தெய்வீக அற்புதம். மூலிகை வாசமும் குளிர் தென்றல் தாண்டவமாடும் மான்களும், மயில்களும், மைனாக்களும், குயில்களும், கொக்குகளும், நாரைகளும் நம் பார்வையில் அடிக்கடி தோன்றும் இந்த ஸ்ரீ வேதகிரிஸ்வரர் ஆலயத்தில் சித்தர்களின் வருகையும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.





கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இது போன்ற தரிசனம் நாம் வேறெங்கும் கண்டதில்லை. பொன்னிறம் கொண்ட இறையாற்றல் நம்மை வெகுவாக கவர்ந்தார்கள்.








திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியமும் பெற, நிம்மதி பெற, செயல்கள் வெற்றி பெற, நோய் நொடிகள் தீர, இந்தக் கோயில் ஒரு வரப்பிரசாதம். பசும் போர்வையில் நாம் இறை தரிசனம் பெற்ற அனுபவத்தை சொல்ல வார்த்தைகள் நம்மிடம் இல்லை.














அன்று நாம் மேலும் ஒரு மலை யாத்திரையில் நல்லம்பாக்கம் சிவனார் கண்டோம். மீண்டும் அடுத்த பதிவில் தரிசனம் பெறுவோம்.


முந்தைய பதிவுகளுக்கு:-

ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_8.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_23.html
  மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html


 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html













குருவே சரணம் - அகத்தியர் மைந்தன் ஹனுமத்தாஸன் குருபூசை இன்று

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குரு என்பது வெறும் சொல் அல்ல. இது ஒரு பற்றற்ற நிலை. நம்மை வழிநடத்தும் இறை. ஒருவருக்கு ஒரு குரு என்பது இந்த காலகட்டத்தில் சாத்தியமில்லை. இந்த காலம் என்றில்லாது எக்காலத்திலும் சாத்தியமில்லை. சுமார் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் நம் தேடல் ஜீவ நாடி பக்கம் சென்றது. அப்போது நமக்கு சித்தன் அருள் வலைத்தளம் அறிமுகமானது.பின்னர் நாடி சொல்லும் கதைகள் என்ற நூலும் கிடைத்தது. அப்போது தான் நமக்கு பரிட்சயம் ஹனுமத்தாஸன் என்ற பெயர். நேரில் சந்திக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றும் நமக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றார்.

இன்றைய தினம் தெய்வத்திரு. ஹனுமத்தாஸன் குருபூசை தினம். அவரைப் பற்றி சிந்திப்பதும், அவர் வாய்மொழி சொன்ன அகத்தியரின் அருள்வாக்கை கேட்பதும், படிப்பதும் நமக்கு இன்னும் குருவிடம் சரணாகதி அடைய உதவும்.ஹனுமத்தாஸன் ஐயா பேசியதும்,கொடுத்ததும் சித்தன் அருளே. கல்யாண தீர்த்தம், பாபநாசம் தரிசனம், ஓதிமலை யாத்திரை என அனைத்தும் சித்தன் அருள் கொடுக்கின்ற ஜீவ அமிர்தமே.

அந்த நாள் இந்த வருடம் தொகுப்பு நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். இன்னும் ஓதிமலை அனுபவம் நம்மை இறையை ஓத வைக்கின்றது. உழவாரப் பணி செய்த அனுபவமும், பேசும் முருகன் தரிசனமும் ஓதியப்பர் நமக்கு அருளினார். இந்த ஆண்டு ஓதியப்பர் பிறந்த நாளை வள்ளிமலையில் கொண்டாடினோம். அடுத்த யாத்திரையாக பாபநாச ஸ்நானம் மற்றும் தரிசனம். நாங்கள் எல்லாம் செய்த பாவத்தை வருடம் ஒருமுறையேனும் போக்க தான் இந்த அருள்நிலையா என்று ஏங்க வைக்கும் பாபநாச ஸ்நானம் மற்றும் தரிசனம் வருடத்திற்கு ஒரு முறை வாய்க்கிறது.  பெயரளவில் கேட்ட தாமிரபரணியை ,எம் உள்ளத்தில் பாய செய்கின்றது பாபநாச ஸ்நானம் மற்றும் தரிசனம்.

அடுத்து கோடகநல்லூர் தரிசனம். இங்கும் நமக்கு சென்ற ஆண்டு உழவாரப் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அனைத்தும் குருவருளால் தான் என்பது நமக்கு கண்கூடாக தெரிகின்றது. இது போல் அந்த நாள் இந்த வருடம் தொகுப்பு நம்மை அகத்தியத்தில் மூழ்கி முத்தெடுக்க வைக்கின்றது. மாதா மாதம் நாம் யாத்திரை செல்வதில்லை. குறிப்பிட்ட சில நாட்களாக அந்த நாள் இந்த வருடம் மட்டும் தவறாது யாத்திரையில் சித்தன் அருளால் செய்து வருகின்றோம். அனைத்தும் ஹனுமத்தாஸன் அருளாலே என்று நமக்கு தோன்றுகின்றது. இந்த உயிர் உய்ய இன்றும் ஆசிகளும், வழிகாட்டலும் தருகின்ற தெய்வத்திரு.ஹனுமத்தாஸன் பாதம் சரணம் அடைகின்றோம். மேலும் அவரின் ஆசி  வேண்டி நிற்கின்றோம்.






அகத்தியப் பெருமானின் "ஜீவநாடி" என்னிடம் வந்து சேர்ந்தபின், என் வாழ்க்கையில் நிறைய ஆச்சரியப்படுகிற அளவுக்கு நல்லது நடந்தது என்பதே உண்மை. என் தாயார் கோடிக்கணக்கில் "ஸ்ரீராமஜெயம்" எழுதியதால் இந்த அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று பின்னர் அகத்தியரால் சொல்லப்பட்ட பொழுது, நான் மிகவும் அகமகிழ்ந்து போனேன். ஆம் அனைவருக்குமே எல்லாமும் கிடைக்க ஊன்றுகோலாய் இருப்பதே அவரவர் பெற்றோர்கள்தானே. ஜீவநாடியால், ராமர், சீதா, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், ராகவேந்திரர், நரசிம்ஹர், வேங்கடவர், சிவபெருமான், முருகர், பிரம்மா, சரஸ்வதி போன்ற தெய்வங்களின் காட்ச்சியும், அருளும் எனக்கு கிடைக்க காரணமாக அகத்தியர் இருந்தார். அந்த காட்சி கிடைத்த நிமிடங்கள் என்பது வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.

ஒரு நாள் ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டு த்யானத்தில் அமர்ந்த பொழுது ஒரு வேண்டுகோளை அவர் முன்னே வைத்தேன்.

"எல்லோரும் சுந்தர காண்டம் எழுதியிருக்கிறார்கள். அதுபோல் நானும் உங்கள் புகழை எழுதவேண்டும். அதற்கு அருளவேண்டும்!" என்றேன்.
"தலையாய சித்தராம் அகத்தியன் தானிருக்க - அன்னவரே உனக்கு வழி காட்டுவார்" என்று காட்சி தந்து அருளி மறைந்தார்.

ஒரு நாள், அகத்தியர் நாடியில் அனுமன் காட்சி தந்து அசரீரியாக சொன்னதை சொல்லி கேட்ட பொழுது,

"பொறுத்திரு தயரதன் மைந்தா - பூலோகப்புண்ணியன், சாரதா தேவியின் மைந்தன் அவன் தரிசனத்தால் - அஞ்சனை மைந்தனின் அவதாரம் நும்மால் எழுதவரும்.  யானும் துணை இருப்பேன். என அருளாசி" என்று அகத்திய மாமுனி வாழ்த்தினார்.
20 வருடங்கள் உருண்டோடியது. நானும் சாரதா தேவியின் மைந்தன் என்று யாராவது ஒருவர் பத்திரிகை ஆரம்பிப்பார், அதில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன்.
ஆனால் மகா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா சந்நிதானப் பெரியவர் சிருங்கேரி சுவாமிகள் அனுக்ரகத்துடன் "அம்மன் தரிசனம்" என்னும் பக்தி நூல் மாதா மாதம் வரும் என்பதும், இதைத்தான் புண்ணியன் சாரதா தேவியின் அம்மன் தரிசனம் என்று அகத்தியர் உரைத்தார் என்பதும் எனக்கு அப்போது தெரியவில்லை. அம்மன் தரிசனம் நூலில் பல கட்டுரைகள் எழுதி வந்தாலும், சுந்தரகாண்டம் பற்றிய நினைப்பு வரவே இல்லை. இடையில் ஏதோ ஒரு காரணத்தால், தொடர்ந்து எழுதுவது முடியாமல் போனது.

மறுபடியும் அந்த பத்திரிகையிலிருந்து அழைப்பு வரவே, அகத்தியர் நாடியில் அதை பற்றி கேட்ட பொழுது,

"அன்றே சொன்னோம் அகத்தியன் யாமும், முற்றிலும் மறந்தனை. மூலத் திருமைந்தன் விந்தைமிகு அனுமன் காண்டம் வெளிவர, மூன்றாம் பிறவி எடுத்த மூதாதைக் கவிஞர் முருகன் பெயருடைய தாசனிவன் - சாரதா அன்னையவள் அரும் பெயரால் - ஆற்றிவரும் தரிசனத்தில் தொடரட்டும் அனுமன் வலம்" என்று உத்தரவு கொடுத்தார்.

அனுமன் அனுகிரகத்தோடு இருபது ஆண்டுகளுக்கு முன் அகத்தியர் வாழ்த்துக்களோடு வந்த சொல்படி பின்னர் "சுகம் தரும் சுந்தரகாண்டம்" என்னும் தலைப்பில் வால்மீகி ராமாயணத்தை, நம் தமிழ் பெரும் கவி சக்ரவத்தி கம்பன் பெருமானுடன் ஒப்பிட்டு அந்த தொகுப்பை வெளியிட்டேன். 
அதில் ஆச்சரியம் என்னவென்றால், இன்ன தசா புக்திக்கு இந்த சுலோகம் வாசிக்கவும் என்று அகத்தியர் இடையில் நுழைந்து வாக்கு தந்தார்.

உண்மையை சொல்வதானால், இதை நான் எழுதவில்லை. அனுமனும், அகத்தியரும் சேர்ந்து எழுத்து உருவில் கொண்டு வந்தார்கள் என்பதே உண்மை. ஆதலால், இந்த "சுகம் தரும் சுந்தர காண்டம்" எல்லாருடைய வாழ்க்கையிலும் ஆனந்தத்தை தரும் என்றால், அந்த பெருமை அவர்கள் இருவரையுமே சாரும்.

இந்த தொகுப்பில், என்னென்ன தசைகள் நடந்தால் என்னென்ன பிரச்சினைகள் வந்தால் சுந்தர காண்டத்திலுள்ள எந்த ஸ்லோகத்தைச் சொன்னால் நற்பலன் கிடைக்கும் என்பது குறிப்பிட்டுள்ளது. இந்த சுந்தரகாண்டத்தை கையில் வைத்திருந்தாலே, "கெடுதல்" என்பது ஒரு போதும் ஏற்படாது என்பது திண்ணம், ஏன் என்றால் இதில் உள்ள வார்த்தைகள், அனுமன் ஆசிர்வாதத்துடன், அகத்தியர் உபதேசத்துடன் வெளிவந்தது.



ஏழரை சனியால் கஷ்டபடுகிறவர்கள் அஷ்டமத்து சனியால் பாதிக்கப்பட்டவர்கள் ,சனி மகாதிசையில் கேது புத்தியோ, கேது திசையில்  சனி புத்தியோ  நடப்பவர்களுக்கு இந்த ஸர்க்கத்தை  தினமும் பாராயணம் செய்தால்,அவர்கள் ஹனுமானின் அருளால் அச்சம் விலகி நலம் பெறுவார்கள்.இவை அகத்திய மகரிஷி ஜீவ அருள் வாக்கு.!!




இந்த தொகுப்பில் அகத்தியப் பெருமான் காட்டிக் கொடுத்த ஸ்லோகங்களை வாசித்து தம் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளை விலக்கிகொண்ட பலரும் எனக்கு நன்றி தெரிவித்த பொழுது, அனுமனுக்கும், அகத்தியருக்கும் நான் நன்றி சொன்னேன்.

அகத்தியர் அடியவர்களே!  


​மேற்சொன்ன விஷயங்களை அறிந்தவுடன், நான் யாரேனும் அந்த தொகுப்பை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்களா என்று தேடினேன். என் நண்பரிடமும் கூறினேன். ஒரு நாள் செய்தி வந்தது. புத்தகம் வாங்கிவிட்டதாகவும் உடனேயே அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். அந்த புத்தகம் வந்து சேர்ந்து வாசித்த பொழுது, எத்தனையோ பிரச்சனைகள் என்னை விட்டு விலகியது. நினைத்தது நடந்தேறியது. எல்லாம் அகத்தியரின் கை வண்ணம்.

யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்கிற நோக்கத்தில், அது எங்கு கிடைக்கும் என்கிற நோக்கில் விவரங்களை கீழே தருகிறேன். நம்பிக்கை உள்ளவர், விருப்பம் உள்ளவர் அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், தினமும் வாசித்து வாருங்கள். நல்ல பலனை அடைவீர்கள். புத்தக வெளியிட்டாளர்களுக்கு வியாபாரம் ஆகவேண்டும் என்கிற நோக்கில் இதை இங்கு தெரிவிக்கவில்லை. இதில் வியாபார உத்தியே கிடையாது. நீங்கள் எல்லோரும் நல்லபடியாக, அகத்தியர் அருளால் வாழவேண்டும் என்கிற நோக்கில் கூறுகிறேன். அத்தனை பெருமையும் அகத்தியர் பாதங்களுக்கே.

புத்தகத்தின் பெயர் : "சுகம் தரும் சுந்தரகாண்டம்"

கிடைக்கும் இடம்:-

அருள் மிகு அம்மன் பதிப்பகம்
16/116, T.P.கோயில் தெரு,
திருமலா ப்ளாட்ஸ்,
(ஸ்ரீ ராகவேந்திரா மடம் எதிரில்)
திருவல்லிக்கேணி, சென்னை - 600 005
தொலைபேசி: 42663546, 42663545
ஈமெயில்:arulmiguammanpathippagam@yahoo.com

மீள்பதிவாக :-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html
 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html
கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

Tuesday, October 8, 2019

ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.


துளஸீஸ்வரர் கோவிலானாது சிங்கப்பெருமாள் கோவில் ஊருக்கு அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் பல்லவ காலத்தில் கட்டப்பட்டது.இந்த தலம் 1200 ஆண்டுகள் பழமையை உடையது.ஸ்ரீ துளஸீஸ்வரர் பக்த சபா என்ற ஆன்மிக சபா மூலம் கோவில் புணரைப்பு மற்றும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இங்கே தினசரி பூஜை மற்றும் பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இங்குள்ள சிவனார் கிழக்கு நோக்கியும்,சற்று ஈசான்ய மூலை நோக்கியும் பார்க்கின்றார்.இந்த கொளத்தூர் கிராமம் இவரின் அருளால் மேம்பட்டு வருகின்றது என்பது கண்கூடு.


தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானின் திருக்கல்யாணத்தைக் காண கயிலையங்கிரிக்குச் சென்றார்கள். அதனால்  பூமியின் வடபாகம் தாழ்ந்து, தென்பாகம் உயர்ந்தது.  அதை சமன் செய்ய ஈசன் குருமுனி அகத்தியரை தென் திசைக்கு அனுப்பினார். தென் திசைக்குக் சென்ற  அகத்தியர் அங்கு 108 சிவ லிங்கங்களை நிறுவி பூஜித்தார். அந்த 108 சிவலிங்கங்களுள் ஸ்ரீ துளஷீஸ்வரர் லிங்கமும் ஒன்றாகும். கோவிலுக்குத் தெற்கே அகத்தியர் ஒரு தடாகத்தை உருவாக்கி கொன்றை மாலை சார்த்தி துளசியால் அர்ச்சித்து புரட்டாசி பவுர்ணமி நாளில் வழிபட்டார். இதனால் மகிழ்ந்த ஸ்ரீ துளஷீஸ்வரர்,


அகத்தியருக்கு அர்த்தனாரீஷ்வரராய் காட்சி கொடுத்தார். இவை அனைத்தும் இக் கோவில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
கணவன்-மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்கவும், இரண்டு பேரும்  சேர்ந்து வாழ வேண்டுமென்றும்,  அன்னியோன்யமாக இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். ஆனால்  ஏதோ ஒரு ஈகோவினாலும்,  வைராக்கியத்தாலும் விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள்.  அப்படிப்பட்டவர்களுக்கு  இந்த   ஸ்ரீ துளஷீஸ்வரர் ஒரு வாரத்தில் பலன் கொடுக்கிறார்.  (ஒரு முறை முயற்சி செய்து  பாருங்கள்.) ஜாதகத்தில் சந்திரன் நீசமாயிருப்போரும், சந்திர பலம் குறைந்திருப்போரும், திங்கட்கிழமைகளில்,  சந்திரஹோரையில் அர்ச்சனை செய்து ஆராதிப்பது மிகச் சிறப்பாகும்.


ஸ்ரீ திருநாராயணன் பெருமாள்  கோவிலும் அருகே உள்ளது.ஸ்ரீ துளஸீஸ்வரர் தரிசனத்தோடு இவரையும் தரிசனம் செய்யுங்களேன்.



ஸ்ரீ துளஸீஸ்வரர்



அன்னாபிஷேகத்தில் ஸ்ரீ துளஸீஸ்வரர்



ஸ்ரீ வில்வநாயகி 











பிரதோஷம் மற்றும் சிவராத்திரி பூஜையின் போது ஸ்ரீ வில்வநாயகி சமேத  ஸ்ரீ துளஸீஸ்வரர் தரிசனம் மேலே கண்டீர்களா? கண்டிப்பாக ஒரு முறை சென்று வாருங்கள். இந்த தலத்தில் உள்ள அகத்தியர் தரிசனம் பெறாமல் விட்டால் எப்படி? இந்த தரிசனம் நிறைவு பெறும் ? அகத்தியர் தரிசனம் கீழே 




மீள்பதிவாக:-

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_23.html

  மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html
ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html
தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

Monday, October 7, 2019

பாடல் பெற்ற தலங்கள் (5) - திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில்

இறை அன்பர்களே...

பாடல் பெற்ற தலங்கள் என்ற பதிவு நம் தலத்தில் கண்டு வருகின்றோம். அந்த வகையில் திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில், திருநெடுங்களம்,திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் என்று திருத்தலங்கள் பார்த்தோம். இன்றைய பதிவில் திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில்  பற்றி காண உள்ளோம். நாம் மேற்சொன்ன அனைத்து கோயில்களும் திருச்சியில் உள்ளன. ஒரு நாள் யாத்திரையாக சென்றால் நன்கு தரிசனம் பெற்று வரலாம். 

திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில்  என்றதும் இந்த கோயிலே எங்கே உள்ளது என்று நாமும் சற்று வியந்தோம். பின்னர் தான் தெரிந்தது திருச்சியில் உள்ள உறையூரில் தான் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. நாம் இந்த தலத்திற்கு இரவு நேரத்தில் தான் சென்றோம். 






உறையூர். பெயர்க்காரணம் தெரியவில்லை. பற்பல திருவிளையாடல்கள் புரிந்து,இறைவன் உறைகின்ற ஊர் என்று பொருள் கொள்ளலாம் என்று நமக்கு தோன்றுகின்றது. அப்படியாயின் மற்ற ஊர்களில் இல்லையா என்று நினைப்பது தவறு.உறையூர் பற்றி மேலதிக தகவல் கிடைத்தால் தங்களோடு பகிர்கின்றோம்.  பதிவிலே பெயர் சிறப்பையும் சேர்த்து விட்டோம்.என்னே! ஒரு அற்புதமான விளக்கம். படித்து அனுபவியுங்கள் !

அது சரி ! உறையூரின் மற்றொரு பெயர் தெரியுமா? திருமூக்கீச்சரம் என்பதுவே அது. ஆம் ! திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில் பற்றி நாம் அறிய இருக்கின்றோம்.ஏன் இது போன்ற செய்திகளை அறிய வேண்டும் என்றால் , இனிமேல் யாராவது உறையூர் என்று சொன்னால், நாம் திருமூக்கீச்சரம் என்ற மற்றொரு பெயரை சொல்ல வேண்டும்.நமக்கு இப்போது தான் இந்த பெயர் தெரிந்தது. இது போன்ற ஊரின் சிறப்புகள்,மற்ற பெயர்களை நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும்.அதற்கு முதலில் நாம் இதை அறிந்து கொள்ள வேண்டும்.
அனைவரும் திருவண்ணாமலை,பழனி  என்று சொல்ல,எழுத கேட்டிருப்போம்.முக்தியைத் தரவல்ல தமிழ் மொழியில் காலம் போன போக்கில் மாற்றத்தை நாம் விரும்பலாகாது.சற்று தமிழ் மொழியில் மூழ்கி படித்து,சைவத்தை பிடிக்கும் போது தான் புரிந்தது.திருஅண்ணாமலை,பழம் நீ  என்று ! இது போல் எழுத ஆரம்பியுங்கள், படிக்க ஆரம்பியுங்கள்.




திருமூக்கீச்சரம்(உறையூர்) வரலாற்றுப் பின்னணி உடையது.

கரிகால் சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். இவன் தந்தையின் பெயர் இளஞ்செட்சென்னி. கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே,தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான்.அப்பப்பா புல்லரிக்கின்றதா?இது போன்ற அரசர்கள் ஆண்ட நாடு நம் தமிழ் நாடு.
 கரிகாலன் பண்டைய சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான். சோழகுலத்தை, தன் முன்னோர்கள் ஆண்ட ஆட்சிப் பகுதியிலிருந்து விரிவு படுத்தினான். அதாவது, காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன. சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெயர் உண்டு. 
 அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர். புலிக்குட்டி, கூண்டுக்குள்ளே இருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு வந்து சிறைக்காவலரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையும் அடைந்தான். இவ்வளவு புகழ் கொண்ட கரிகாலன் ஆட்சியில் இரண்டு இடங்கள் தலைநகராக இருந்தன. அவை காவிரிப் பூம்பட்டினமும், உறையூரும்.

அப்பேற்பட்ட புகழ்மிக்க ஊர் தான் திருமூக்கீச்சரம்.உறையூர் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி(திருச்சி) மாநகரின் ஒரு பகுதியாகும். காவேரியாற்றின் தென்கரையில், திருச்சிராப்பள்ளி கோட்டை இரயில் நிலையச் சந்திப்புக்கு மேற்கில் அமைந்துள்ளது.

தல வரலாறு: 

உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி நகரின் உறையூர் பகுதியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஐந்தாவது தலமாகும். இச்சிவாலய மூலவர் பஞ்சவர்ணேசுவரர் என்றும், அம்பாள் காந்தியம்மை என்றும் அழைக்கப்படுகிறார். உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்கள் ஐந்து வண்ணங்களாக காட்சியளித்த தலமாகும். உதங்க முனிவர் தன்னுடைய மனைவியுடன் கங்கையில் நீராடிய போது, அவர் மனைவி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டார். உதங்க முனிவர் வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக இருந்தமையால், அவருக்கு மனைவியின் இறப்பு பற்றி தெரிந்தது. ஞானியாக இருந்தாலும் மனைவி இழந்தமையால் பித்துபிடித்தவரானார். பல இடங்களில் சுற்றித் திரிந்து பின்பு உறையூர் சிவலாயத்திற்கு வந்தார். இங்கு இறைவன் காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிகால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வைர லிங்கமாகவும் மற்றும் அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கமாகவும் காட்சியளித்தார். இதனால் இத்தல மூலவருக்கு பஞ்சவர்ணேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.




பழந்தமிழ் நாட்டை ஆண்ட முவேந்தர்கலான சேர ,சோழ ,பாண்டிய மன்னர்களில் முற்கால சோழர்களின் தலைநகராக விளங்கியது திருச்சி உறையூர் .உறையூறை ஆண்ட சோழ அரசன் ஒருவன் யானை மேல் அமர்ந்து நகர்வலம் வந்தபோது அந்த யானைக்கு திடீர் என்று மதம் பிடித்தது .பாகனும் செய்வதறியது திகைத்தனர் .அப்போது கோழி ஒன்று ஆவேசத்தோடு குரல் எழுப்பிக்கொண்டு பட்டத்து யானையின் தலையின் மேல் நின்று தன் அலகினால் குத்தியது .உடனே , யானை தன் மதம் அடங்கி பழைய நிலையை அடைந்தது .யானையை அடக்கிய கோழியானது தனது காலால் ஒரு இடத்தில அகழ்ந்து பார்த்தது .அப்போது அந்த இடத்தில் ஒரு சிவ லிங்கம் கிடைத்தது .அதை ஆலயம் எடுத்து வழிபாடு செய்தான் சோழமன்னன் .இதுவே உறையூர் பஞ்சவர்னேஷ்வர் திருக்கோவில்.மூக்கிச்சுரம் என்பது கோவில் பெயர்.
மற்றுமொரு தல வரலாறும் இத்தலத்திற்கு உண்டு....

உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னனின் மனைவி காந்திமதி ஒரு சிறந்த சிவபக்தை. தினந்தோறும் திருச்சிராப்பள்ளி மலைக்குச் சென்று தாயுமானவரை வழிபட்டு வந்தாள். அவள் பிள்ளைப்பேறு அடைந்த போதும் தவறாமல் வழிபாடு செய்து வந்தாள். ஒருநாள் உறையூரில் இருந்து சிராப்பள்ளி சென்று கொண்டிருந்தபோது வெய்யில் கொடுமை தாளாமல் வழியில் மயங்கி விழுந்தாள். தனது இறை வழிபாடு தடைபட்டு விட்டதே என்று மிகவும் மனம் வருந்தினாள். காந்திமதியின் மனவருத்தத்தைப் போக்க விரும்பிய இறைவன் அந்த இடத்திலேயே காந்திமதிக்குக் காட்சி தந்தார். இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.



திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருமூக்கீச்சரம் தேவாரத் திருப்பதிகம்
(இரண்டாம் திருமுறை 120வது திருப்பதிகம்)

    2.120 திருமூக்கீச்சரம்
    பண் - செவ்வழி
    திருச்சிற்றம்பலம்
    சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்
    காந்தளாரும் விரலேழை யொடாடிய காரணம்
    ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ
    வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே. 2.120.1
    
    வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக்
    கொண்டவரும் புனல்சேர்த் துமையாளொடுங் கூட்டமா
    விண்டவர்தம் மதிலெய்த பின்வேனில் வேள்வெந்தெழக்
    கண்டவர்மூக் கீச்சரத்தெம் அடிகள்செய் கன்மமே. 2.120.2
    
    மருவலார்தம் மதிலெய்த துவும்மான் மதலையை
    உருவிலாரவ் வெரியூட்டி யதும்முல குண்டதால்
    செருவிலாரும் புலிசெங் கயலானை யினான் செய்த
    பொருவின்மூக் கீச்சரத்தெம் அடிகள் செயும்பூசலே. 2.120.3
    
    அன்னமன்னந் நடைச்சாய லாளோ டழகெய்தவே
    மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணம்
    தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்குசெங் கோலினான்
    மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோர்மாயமே. 2.120.4
    
    விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே
    நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்
    வடமன்நீடு புகழ்ப்பூழி யன்தென்னவன் கோழிமன்
    அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே. 2.120.5
    
    வெந்தநீறு மெய்யிற்பூசு வராடுவர் வீங்கிருள்
    வந்தெனாரவ் வளைகொள்வதும் இங்கொரு மாயமாம்
    அந்தண்மாமா னதன்னே ரியன்செம்பிய னாக்கிய
    எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரேதமே. 2.120.6
    
    அரையிலாருங் கலையில்லவ னாணொடு பெண்ணுமாய்
    உரையிலாரவ் வழலாடுவ ரொன்றலர் காண்மினோ
    விரவலார்தம் மதில்மூன் றுடன்வெவ்வழ லாக்கினான்
    அரையான்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே. 2.120.7
    
    ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்ற துங்கூற்றை யுதைத்ததும்
    கூர்க்குநன்மூ விலைவேல்வல னேந்திய கொள்கையும்
    ஆர்க்கும்வாயான் அரக்கன்னுரத் தைந்நெரித் தவ்வடல்
    மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே. 2.120.8
    
    நீருளாரும் மலர்மேல் உறைவான்நெடு மாலுமாய்ச்
    சீருளாருங் கழல்தேட மெய்த்தீத்திர ளாயினான்
    சீரினாலங் கொளிர்தென்ன வன்செம்பியன் வில்லவன்
    சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே. 2.120.9
    
    வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர்
    உண்பினாலே யுரைப்பார் மொழியூனம தாக்கினான்
    ஒண்புலால்வேல் மிகவல்லவ னோங்கெழிற் கிள்ளிசேர்
    பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே. 2.120.10
    
    மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச்
    செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்
    நல்லராய்வாழ் பவர்காழி யுள்ஞானசம் பந்தன
    சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே. 2.120.11

             - திருச்சிற்றம்பலம்





சிறப்புக்கள் : 

படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு ஐந்து நிறங்களை வெளிப்படுத்தியதாலும், உதங்க முனிவருக்கு ஐந்து வழிபாட்டு காலங்களிலும் முறையே இரத்தினம், படிகம், பொன், வைரம், சித்திரம் என்ற ஐந்து வேறு வேறு வண்ண வடிவம் காட்டினான். இறைவன் என்ற வரலாற்றின் அடிபடையலும் இங்குள்ள இறைவன்பஞ்சவர்னேஷ்வர் என்றும் தமிழில் ஐவண்ண பெருமான், ஐந்நிற பெருமான், ஐநிற நாயனார் என்றும் பெயர் வழங்க பெற்றதாக இக்கோவில் தல புராணம் கூறுகிறது.

பஞ்சபூத தலங்களாகிய சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், காளஹஸ்தி ஆகிய தலங்களில் காட்சியளித்து அருள் புரியும் சிவபெருமான் ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கி உறையும் தலமே திருமூக்கீச்சரம் என்ற உறையூர் திருத்தலம். எனவே பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் புண்ணியம் இத்தல இறைவனை வழிபட்டாலே கிடைக்கும். இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கின்றோம். பஞ்ச பூத தலங்களை தனித்தனியே தரிசித்தல் வேறு.  ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கி இறைவன் இங்கே உறைவதால் தான் இத்தலத்திற்கு உறையூர் என்று பெயர் பெற்றது.
மேலும் படைத்தலின் தெய்வமாகிய பிரம்மாவே இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால் எவ்வகை தொழிலிலும் வெற்றியடைய இத்தல மூலவராகிய பஞ்சவர்ணேஸ்வரரை வழிபட்டால் நலம் பெறலாம். கார்க்கோடகன் ஆகிய பாம்பும் கருடனும் இத்தலத்தில் வழிபட்டுள்ளதால் எவ்விதத்தில் பெற்றிருக்கும் சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து விமோசனம் கிடைக்கும் தலம் இதுவாகும். மற்றும் காசியப முனிவர், அவன் மனைவி கத்துரு இங்கு இறைவனை வழிபட்டுள்ளார்.

யானை ஏற முடியாதபடி 70 மாடக்கோவில்களைக் கட்டிய கோச்செங்கட் சோழன், 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்ச் சோழன் ஆகியோர் பிறந்த தலம் இதுவே.இவருடைய சிலை இச்சிவாலயத்தில் தனி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளது.
மூவேந்தர்களும் சேர்ந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.
இச்சிவாலயத்தில் உள்ள கல்வெட்டுகள் சோழர் கல்வெட்டுகளாகும். அக்காலத்தில் நிலக்கொடை, ஆபரணக்கொடை, திருவிழா கட்டளைகள் போன்றவற்றை பற்றி கூறுகிறது.
இச்சிவாலயம் கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.








திருக்கோயிலின் வெளியே இருந்த விளக்கை கண்டு பிரார்த்தனை செய்து அங்கிருந்து புறப்பட்டோம்.

எப்படி செல்வது :

திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் ஒரு பகுதியாகும். தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்தும் இரயில் மூலமாகவும், பேருந்து மூலமாகவும் திருச்சிராப்பள்ளி இணைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளியிலிருந்து இக்கோவில் 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நகரப்பேருந்து வசதி வெகுவாக உள்ளது.

மீள்பதிவாக :-



பாடல் பெற்ற தலங்கள் (4) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/09/4.html

தரிசிப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் & பாடல் பெற்ற தலங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3.html

பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/08/2.html

பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - https://tut-temples.blogspot.com/2019/07/1.html


ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html

Sunday, October 6, 2019

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம் - நவ சண்டி மஹா யாகம் & நெய்க்குள தரிசனம் காண வாருங்கள் - 08.10.2019

 அனைவருக்கும் வணக்கம்...

நவராத்திரி கொண்டாட்டங்களில் அனைவரும் அருள் பெற்று வருவீர்கள் என்று நாம் நம்புகின்றோம். கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் மனம் சஞ்சலப்பட வேண்டாம், இதோ..நம் தளத்திலே நவராத்திரி கொண்டாட்ட பதிவுகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் குருவருளால் அளித்துக் கொண்டு வருகின்றோம்.

சிவனை பூஜித்த அம்பாள், ஸ்ரீ கெஜலஷ்மி, ஸ்ரீ காமாட்சி, ஸ்ரீ தனலட்சுமி, ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ வராஹி, ஸ்ரீ சந்தானலட்சுமி என கண்டு இருப்பீர்கள் என நம்புகின்றோம்.

 பத்தாவது நாள் "விஜயதசமி" நாளோடு நவராத்திரி  விழாவானது  பத்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது. விஜயதசமி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் நவ சண்டி மஹா யாகம் வருகின்ற  செவ்வாய்க்கிழமை  காலை முதல் நடைபெற உள்ளது.வழக்கம் போல் அழைப்பிதழ் இணைத்துள்ளோம். இந்த யாகம் மொத்தம் 13 அத்தியாயங்களாக பகுக்கப்பட்டு நடைபெறும்.

சண்டி ஹோமம், உலகத்தின் அன்னையாகத் திகழும் சண்டி தேவியைக் குறித்து செய்யப்படும் சக்தி வாய்ந்த ஹோமம் ஆகும். நிறைவான வாழ்க்கை வாழ விடாமல் நம்மைத் தடுக்கும் திருஷ்டி தோஷங்கள் போன்றவற்றைப் போக்குவதற்கும், இப்பிறவி, முற்பிறவியில் ஏற்பட்ட சாபங்களைக் களைவதற்கும், உடல், ஆன்மா போன்ற இரண்டையும் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், இந்த ஹோமம் வரப்பிரசாதமாக விளங்குகிறது.

சாக்த வழிபாட்டில் கடுமையான உக்கிரத்துடன் இருக்கும் பராசக்திக்காக நடத்தப்படுவதே சண்டி ஹோமம். அப்படி உக்கிரத்துடன் இருக்கும் பராசக்தியே சிவன், விஷ்ணு, பிரம்மா  என மும் மூர்த்திகளை படைத்தார் என்கிறது புராணம். தேவியின் மீது நம் அன்பை காட்ட, தேவியின் அருள் பெற்று நம் தேவைகளை நிறைவேற்றி கொள்ள என இரு விதமாக இந்த ஹோமம் செய்யப்படலாம். சாக்த வழிபாட்டில் அனைத்து ஹோமங்களூக்கும் தலையாய ஹோமம் இது என கூறலாம். 

கேட்டதை உடனே அருளும் சக்தி படைத்தது இந்த ஹோமம். மிக அதீத பொருட்செலவு மற்றும் மிக உக்ரமானது என்பதால் இந்த ஹோமம் அடிக்கடி நிகழ்த்தப்படுவதில்லை. ஒவ்வொரு அத்தியாய பாராயணத்தின்  பொழுதும் தேவிக்கு அக்னியில் புடவை சாற்றப்படும். மொத்தம் பதினான்கு புடவைகள் சாற்றப்படும். உக்ரகம் அதிகம் என்பதால் வீட்டில் செய்யப்படுவதில்லை. கோவில்கள் அல்லது மடங்கள், மண்டபங்கள் போன்றவற்றில் மட்டுமே செய்விக்கப்படுகிறது. எவ்வளவு பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லாத நிலை,கிரகங்களினால் பிரச்சனைகள், பயம், மரண பயம், எதிரிகள் தொல்லை அழிய, எவ்வளவு பிரயத்தனம் செய்தும் முடிக்க முடியாத காரியங்கள் வெற்றி பெற, செல்வம் சேர இந்த ஹோமத்தை செய்தோ அல்லது கலந்து கொண்டோ தேவியின் அருளை பெறலாம்.

பாராயண பலச்ருதியிலேயே இந்த பாராயணத்தை செய்பவருக்கு மட்டுமின்றி இதை உடனிருந்து கேட்பவருக்கும்  அதீத பலன்கள் கிட்டும் என கூறப்பட்டுள்ளது.   மஹாலக்ஷ்மி, சரஸ்வதி,மஹாகாளி என மூவருக்குமே செய்யப்படும் இந்த ஹோமத்தில் 700 ஸ்லோகங்கள் வரை கூறப்படும். வெளியில் கூற முடியாத காரியங்கள் வெற்றி பெற வேண்டுமானால் சண்டியை அணுகுவதை தவிர வேறு வழி இல்லை.

இதில் முதல் அத்தியாயம் நம் தளம் சார்பில் நடைபெற உள்ளது. இந்த பதிவின் வாயிலாக இது நாள் வரை அனுதினமும் கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலயம் &  ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம் இரண்டிலும் காலை, மாலை நவராத்திரி விழாவிற்கு உறுதுணையாக இருந்து உபயம் செய்தவர்கள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கின்றோம். மேலும்  உடலுழைப்பை தந்து வழங்கிய அத்துணை நாள் உள்ளங்களின் பாதம் பணிகின்றோம்.




08.10.2019 அன்று மாலை நெய்க்குள தரிசனம் பெறவும் உள்ளன்போடு அழைக்கின்றோம். அதென்ன நெய்க்குள தரிசனம்?


திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் நவராத்திரி காலத்தில் மிகவும் பிரசத்தி பெற்றது. விஜயதசமி அன்று கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர்.  அத்துடன்  புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். 

சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர். அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது என்று நம்பப்படுகிறது.

இதுதான் நெய்க்குள தரிசனம். நவராத்திரி நிகழ்வின் மிகவும் பிரசித்தி பெற்ற  தரிசனம். திருமீயச்சூரில்  உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும் தரிசனம்.இதோ உங்களுக்காக!


நெய்க்குள தரிசனம் 


மேலே நாம் கண்ட தரிசனத்தை அடுத்து, சென்ற ஆண்டு  கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோயிலில் பெறப் போகின்றோம். இப்படியொரு தரிசனத்தை அன்னை அருள்வாள் என்று நாம் கனவில் கூட நினைத்ததில்லை. நாம் நமக்கு இது வேண்டும்? அது வேண்டும்? என்று கேட்டுக் கொண்டே போகலாம்.ஆனால் அன்னைக்குத் தானே தெரியும்,தம்  பிள்ளைக்கு என்ன தர வேண்டும் என்று ? அப்படிதான் அமைந்தது இந்த ஆண்டு விஜய தசமி தரிசனம்.

நாம்  அன்றைய தினம் திரு அண்ணாமலையார் தரிசனம் பெற்று, அன்று மாலை 6 மணிக்கு கூடுவாஞ்சேரி வந்தோம். நேரம் ஆகி விட்டதோ? என்று மனம் பதைபதைத்தது. கோயில் சென்றோம்.  நல்ல கூட்டம்.கூட்டத்தில் ஒருவனாய் நாம் இருந்தோம். அன்று லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து கொண்டு இருந்தார்கள். சரியாக 7 மணி அளவில் அம்மன் புகழ் பாடல்கள் பாடி, சங்கல்பம் செய்தோம். சற்று நேரத்தில் தீபாராதனை. நமக்கு நெய்க்குள தரிசனம் பற்றி தெரியவில்லை. திரையை விலக்கிய பின்னரே, குருக்கள் நெய்க்குளம் தரிசனம்  பற்றிய செய்தியைச் சொன்னார். மெய்  மறந்தோம். அன்னையின் அன்பில் பரவசம் அடைந்தோம். அன்று காலை சண்டி ஹோமம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாலை குங்கும அர்ச்சனையும் நடைபெற்றது.
இதோ..கூடுவாஞ்சேரி லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம்












அம்மன் நெய்க்குளம் தரிசனம் பெற்றீர்களா? ஒரே கல்லில் ரெண்டு மாங்கா என்பது இதுதான் போலும். ஒரே பதிவில் திருமீயச்சூர் மற்றும் கூடுவாஞ்சேரியில் உள்ள லலிதாம்பிகை அம்மனின் தரிசனம் அதுவும் நெய்க்குளம் தரிசனம் என்றால் சும்மாவா? இப்படியொரு பதிவை நாம் அளிக்க இருக்கின்றோம் என்று  நாமும் நினைக்கவில்லை. எல்லாம் அவள் அருளாலே தான்.
திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகை அம்மன் பெற அன்னையிடம் பிரார்த்திக்கின்றோம். கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் பற்றி இனிவரும் பதிவுகளில் சொல்ல, விநாயகரிடம் வேண்டுகின்றோம்.
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை                            
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  – கோலஞ்செய்                                 
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு                           

சங்கத் தமிழ் மூன்றும் தா!

இது ஏதோ சாதாரணமான பாடல் என்று நினைக்காதீர்கள். பல முறை படித்துப் பார்த்தால் பல செய்திகளை நமக்கு நம் அவ்வைப் பாட்டி சொல்வது புரியும்.

இந்த ஆண்டு நெய்க்குள தரிசனம் காண வாருங்கள்.

- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.

மீள்பதிவாக:-