இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய நாள் ஓதிமலையின் அற்புத தரிசனம் பெற வேண்டிய நாள் . இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இது போன்று ஒரு நாளில் ஓதிமலை சென்று ஓதியப்பர் தரிசனம் பெற்று வந்தோம் . நம்மைப் பொருத்தவரையில் இன்றைய நாளை அந்த நாள் இந்த வருடம் தொகுப்பில் தான் கருதுகின்றோம். ஓதிமலை பற்றிய பொதுவாக்கினை ஒரே தொகுப்பாக இன்றைய நாளில் நாம் அறிந்து உணர குருவிடம் வேண்டி இன்றைய நாளில் நாம் விண்ணப்பிக்கின்றோம் .
இறைவா அனைத்தும் நீயே!
ஓதிமலையின் சூட்சுமத்தை இப்போது உரைக்கின்றேன். நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் நீங்கள் செல்லலாம் என்பேன். கார்த்திகை மாதத்தில் செல்லலாம் என்பேன். அங்கு பிள்ளையோனும் (பிள்ளையார்) முருகன் பின் ஐயப்பனும் சந்தோசமாக விளையாடுவார்கள். அப்பனே! அவ் சூட்சுமத்தை சொல்கின்றேன் அவர்கள் விளையாடும் இடத்தை கூட.
அப்பனே! இவ்வாறு எவ்வாறு இறைவன் எப்பொழுது வருவான் என்பது சீராக கவனித்து அங்கு சென்றால், பின் அவர்களும் பார்த்துவிட கர்மாக்கள் நீங்கும் என்பேன். ஆனால் மனிதனுக்கு இது புரியாமல் போய்விட்டது என்பேன். ஆனாலும் புண்ணிய செயல்கள் செய்யும் காரணத்தால் தானாகவே அதுபோன்று அமைவதும் உண்டு என்பேன்.
இவ்வாறு அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு உரைத்துள்ளார்.
முருகர், விநாயகர், ஐயப்பன் இணைந்து சந்தாேசமாக விளையாடக்கூடிய இடம் ஓதிமலை உச்சியில்.
இடம் : ஓதிமலை உச்சியில் ஆலய சுற்றுபிரகாரத்தில்.
நாள் : கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சஷ்டி நாள்
குறிப்பு : இவ்வருடத்தில் கார்த்திகை மாதத்தில் கடைசி சஷ்டி நாள் வருகிற 10/12/2025 (புதன்) அன்று வருகிறது.
ஆலயம் : அருள்மிகு ஓதிமலை முருகன் காேவில்
ஊர் : ஓதிமலை (இரும்பறையில் இருந்து 04 கி.மீ தாெலைவு)
வட்டம் : அன்னூர்
மாவட்டம் : காேயம்புத்தூர்
ஓதிமலை ஆலயத் தாெடர்புக்கு : 98429 67081, 8903947083
ஓதிமலை சென்று இறை அருள் பெறுக!
சென்ற ஆண்டின் சில காட்சிப்படங்களை கீழே இணைக்கின்றோம்.
இவ்வாறு நேற்றைய ஓதிமலை யாத்திரை மிக மிக சிறப்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment