"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, December 5, 2025

07.12.2025 - மதுரை சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை அழைப்பிதழ்!

                                                              இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

                                                                  சர்வம் சிவார்ப்பணம்... 


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருநாதர் அகத்திய பெருமான் அருளால் வருகின்ற 07.12.2025 அன்று உலக நன்மைக்காக சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை மதுரையில் நடைபெற உள்ளது. அழைப்பிதழ் கண்டு அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகின்றோம்.

07.12.2025 ( ஞாயிறு ) அன்று மதுரை சிவபுராண கூட்டுப்பிரார்த்தனைக்கான அழைப்பும், மதுரையில் இருந்து பேரூந்துக்கான தகவலும்.

இடம் : A S மஹால் திருமண மண்டபம், வில்லாபுரம்

நாள் : 07.12.2025 - ஞாயிறு

நேரம்: காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை

பேருந்து வசதி :

பெரியார் நிலையத்தில் இருந்து 76,10,10A ,10D ,10L , 10R - மீனாட்சி நகர் நிறுத்தம்

மாட்டுத்தாவணியில் இருந்து 16A , 16AA ,16AM - மீனாட்சி நகர் நிறுத்தம்

மேற்கண்ட இரண்டு வழித்தடங்களில் உள்ள போக்குவரத்தை தகவலுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பகிர்கின்றோம்.


                           







கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் தேதி நடைபெற்ற திருஅண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனையின் காணொளி இங்கே கண்டு பல சித்த ரகசியங்கள், சித்தர் பெருமக்களின் ஆசிகளை பெறும்படி வேண்டி பணிகின்றோம்.




அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

No comments:

Post a Comment