"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, March 23, 2021

அன்பே சிவம் ; அன்பே சக்தி; அன்பே அகத்தியம் - பங்குனி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 25.03.2021

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். 

சார்வரி வருட பங்குனி மாத ஆயில்ய ஆராதனை நாளை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நடைபெற உள்ளது. அதன் பொருட்டு இன்றைய பதிவில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பற்றி மீண்டும் தொட்டுக்காட்ட விரும்புகின்றோம். ஸ்ரீ அகத்தியர். தமிழின் மூலத்தை கொடுத்தவர்.முருக பெருமானின் அன்பிற்கு பாத்திரமானவர்.அகத்தியர் என்ற பெயரில் ஒவ்வொரு யுகங்களிலும் பலர் வாழ்ந்துள்ளனர் என்பது நமக்கு புதிய செய்தி. தமிழ் உள்ளவரை அகத்தியம் இருக்கும். அகத்தியம் ஒன்றே இந்த கலிகாலத்தில் கடைத்தேற உதவும். அகத்தியம் சத்தியம். சத்தியமே அகத்தியம். என்று சொல்லவேண்டும் என்றால் அகத்தியரை அருட்குருவை மனதில் வைக்க வேண்டும். அன்பே சிவம் என்றால் அன்பே சக்தியும் ஆகும். சிவமும் சக்தியும் இணையும் போது அகத்தியமும் நம்முள் தொட்டு காட்டி அன்பின், அருளின், அகத்தியத்தின் ஊற்றாக பிறக்கும்.

பங்குனி  மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.03.2021

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான சார்வரி  வருடம் பங்குனி  மாதம் 12 ஆம் நாள் 25.03.2021  வியாழக்கிழமை   அன்று ஆயில்ய நட்சத்திரமும், சித்த  யோகமும் கூடிய சுப தினத்தில் காலை  9  மணி முதல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில்  அருள்பாலிக்கும்  ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு  அபிஷேகம், அலங்காரம் செய்து  ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.

நம் குருநாதர் பற்றி பேச வேண்டும் என்றால் நாளெல்லாம் பேசிக் கொண்டே இருக்கலாம். நேற்று ஒரு அன்பர் மீண்டும் ஆயில்ய நட்சத்திர ஆராதனை பற்றி நம்மிடம் கேட்டார். நமக்கு உணர்த்தப்பட்ட செய்திகளை  தருகின்றோம்.

இந்தக்கேள்விக்கு நம் குழுவின் சிலர் இவ்வாறு  பதில் கூறி இருந்தனர்.




நட்சத்திரங்களுக்கு அப்பாட்பட்டவர் அகத்தியப் பெருமான். இந்த மானுடங்களை கடைத்தேற்ற அவரால் வகுக்கப்பட்டது ஆயில்ய பூசை. இந்த பூசையால் பயன்பெற்றோர் ஏராளம்.இது மிக மிக உண்மை..சித்தர்களுக்கு நாளென்பது கிடையாது. நட்சத்திரம் என்பதும் கிடையாது. இவை எல்லம்மா நம் வழிபாட்டிற்காக/ மன மகிழ்ச்சிக்காகவே உள்ளது.அன்றைய தினம் குருவினை சரணடைய ஒரு வாய்ப்பு என்றும் கூட சொல்லலாம். இன்னும் ஆழமாக மனதை உழுதால்,சித்தன் அருள் இவ்வாறு பேசுகின்றது.




உங்கள் எண்ணப்படி, அகத்தியருக்கும், நட்சத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறீர்கள். சிவன் அருளினால் அவர் தோன்றினாலும், காலத்துக்குள், ஒரு திதி நடக்கும் பொழுது, ஒரு நட்சத்திரம் ஆளுமையில் உள்ள பொழுது தான் ஒரு ஆத்மா உருவாக்கப்பட்டிருக்கும், அல்லது இறைவனிடமிருந்து பிரித்து விடப்பட்டிருக்கும். ஒரு புல்லை கூட முளைக்க வைக்கும் தகுதி இல்லாத மனிதனுக்கு, நாள், தேதி, கிழமை, ஊர், காலம் என வரிசையாக அனைத்தும் இருக்கும் பொழுது, மிக உயர்ந்த நிலையில், குரு ஸ்தானத்தில் இருக்கும் ஒருவருக்கு, நட்சத்திரம் கூடவா இருக்காது? இன்னொரு விஷயம் தெரியுமா? பூமியில், இறைவனே அவதாரம் எடுத்தாலும், பூமியின் சட்ட திட்டங்களுக்கு, அவனும் அடிமையாக இருந்துதான் ஆகவேண்டும். உதாரணமாக, கிருஷ்ணர், ராமர் அவதாரங்களை கூறலாம்.



உண்மையாக புரிந்து கொள்பவர்கள், அமைதியாக இருப்பார்கள். வார்த்தைகள் சிதறாது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில், நாளில், சேய்கள் நல்லதை செய்திட, அது உலகத்தின் நன்மைக்கு பலம் கூட்டும். அப்படியாக ஒன்று நடந்து விட்டு போகட்டுமே என்கிற எண்ணத்தில் தான் இதனை பூஜைகள், த்யானம் எல்லாம் ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.

 சரி..நாம் இது நாள் வரை அகத்தியரை எப்படி எல்லாம் வழிபட்டு வருகின்றோம். பக்தி மார்க்கம் , தான தர்ம மார்க்கம், கர்மயோக மார்க்கம், ஞானயோக மார்க்கம்  என்று வழிபடலாம். ஆனால் நாம் செய்து வரும் ஆயில்ய பூசையின் என்ன செய்து வருகின்றோம்.  அகத்தியரை உருவமாக பாவித்து மலர்கள் மூலிகைகள் படைத்து அர்ச்சனை செய்து வழிபடுவதுநமக்கு  மிகவும் பிடித்தமானது. இது அகத்தியரை விரும்பும் யாவருக்கும் எளிதில் சாத்தியமானது. பாசமுள்ள அகத்தியமாஹாமுனி இந்த மார்க்ககத்தில் யாவரும் வழிபடுவதை அவர் மிகவும் விரும்புவதை நாம்  உணரலாம்.  நாம் கடந்த பள்ளிப்பருவத்தில் இருக்கும் போது பக்தி மார்க்கத்தை அடிக்கடி ஏளனம் செய்ததுண்டு. அதற்கு  நாம்  கடும் தண்டனை வாங்கியதுண்டு. இந்த கலியுகத்தில் பக்திமார்க்கம் மிகவும் எளிதானது. ஆற்றல் வாய்ந்தது. முதலில் ஆரம்பித்த போது பக்தி மார்க்கத்தில் மட்டும் தான் இருந்தோம்.பின்னர் அப்படியே அது தான/தர்ம மார்க்கம், கர்மயோக  மார்க்கம் நோக்கி நம்மை செம்மைப்படுத்தும்.


நாளைய வழிபாட்டில் கூடுவாஞ்சேரி அருகில் உள்ளவர்கள் நேரில் வந்து கலந்து கொள்ளவும். இயலாத அன்பர்கள் தத்தம் வீட்டில் நெய் தீபமிட்டு, ஓம் அகத்தீஸ்வராய நமஹ என்று ஓதி, 108 முறை ஓம் நமசிவாய என்று தியானித்து, கோளறு பதிகம் படித்து வழிபாட்டு செய்ய வேண்டுகின்றோம். குருவிடம் சரணடையுங்கள். அதுவும் பரிபூரணமாக சரணடையுங்கள். பின்னர் நீங்கள் வேண்டுவது அனைத்தும் குரு உங்களுக்கு தருவார்.

வேறென்ன குருவிடம் கேட்க போகின்றோம்..வேண்டத்தக்கது அறிவோய் நீவீர் !

1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!

ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை சில அருள்நிலைகளை  கீழே பகிர்கின்றோம்.








நம் தளம் சார்பில் கொண்டாடிய மஹா ஆயில்யம் மற்றும் பல பதிவுகளை ஒவ்வொன்றாக தர குருவிடம் வேண்டுகின்றோம். 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - ஐப்பசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 08.11.2020 - https://tut-temples.blogspot.com/2020/11/08112020.html

அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான் - புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/12102020.html

 எமையே ஆள்கின்ற அகத்தீசனே போற்றி! - ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 15.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/15092020.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020 - https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html

அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_21.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

No comments:

Post a Comment