"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, January 5, 2023

கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் - ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தினமும் மார்கழி ஆயில்ய வழிபாட்டிற்கான அழைப்பிதழ் கண்டு வருகின்றோம். ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 11 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா,  பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் , பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் - ஸ்ரீ லோபாமாதா ஸ்ரீ அகத்தியர் மஹா குரு பூஜை (09.1.2023) என பதிவுகளை பார்த்து வருகின்றோம். இந்த வரிசையில் இன்றைய பதிவில் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் - ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் பற்றி இங்கே காண இருக்கின்றோம்.

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் ஒவ்வொன்றும் வெறும் கற்களால் கட்டப்பட்டதல்ல. நம் முப்பாட்டனின் கலாசாரத்தாலும், நால்வர் பெருமக்களின் ஆசியாலும் கட்டப்பட்டது. இவை நம் தமிழின் பெருமை பேசும் வாழ்வியல் கூடங்கள். பக்தியை பறைசாற்றும் உயிர் ஆலயங்கள். நாம் தலத்தில் பாடல் பெற்ற தலங்கள் என்று ஒரு தொடர் அளித்து வருகின்றோம். சும்மா..ஏனோ தானோ என்று தான் நாமும் முதலில் நினைத்தோம். ஆனால் ஒவ்வொரு பாடல் பெற்ற தல தரிசனமும் நம் தலை எழுத்தை மாற்றும் சக்தி படைத்தவை என்று நாம் கருதுகின்றோம். ஒவ்வொரு தல பயணமும் நமக்கு இன்னும் வாழ்வியலை ஊட்டுகின்றது. தல யாத்திரைக்கு சென்றால் அவசரம் காட்டாது மிக மிக பொறுமையாக தரிசனம் செய்து வரவும். தலங்களின் எண்ணிக்கையில் தரிசனம் செய்வதில் ஒன்றுமே பயனில்லை. ஒரு விடுமுறை தினத்தில் ஓரே ஒரு தலம் தரிசனம் செய்தாலும் அது நமக்கு ஓராண்டு முழுதும் தெம்பை தரும்.

மாதம் ஒரு பாடல் பெற்ற தலத்திற்கு என்று திட்டமிடுங்கள். இல்லையேல் குறைந்தது 3 மாதத்திற்கு ஒரு முறையாவது இது போன்ற பாடல் பெற்ற கோயில்களுக்கு சென்று வாருங்கள். இன்னும் திருநெடுங்களம் கோயிலுக்கு நாம் சென்று வந்தது ஆச்சர்யமாக உள்ளது. வாகன வசதி இல்லாத வழித்தடத்தில் எப்படியோ சென்று சேர்ந்தோம். கோயில் திறந்ததும் ஒவ்வொரு சந்நிதியாக சென்று தரிசித்து, அங்கு பெருமக்கள் பாடிய பாடலை பாடி வழிபட்டோம். அப்போது தான் நமக்கு இந்த தலம் திருப்புகழ் தலம் என்றும் தெரிந்தது. அங்கே கல்வெட்டில் இருந்த பதிகங்களை படித்து தான் வந்தோம். இது போல் எத்தனையோ தலங்கள் உள்ளன. ஒவ்வொரு தலத்திலும் பொறுமையாக தரிசனம் செய்து, நெய் விளக்கேற்றி, பதிகம் படித்து தரிசித்து வாருங்கள். நாம் சொல்ல வருகின்ற செய்தி உங்களுக்கு புரியும். இனி கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் தரிசனம் தான்.

கும்பேசுவரர் கோயில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 26ஆவது சிவத்தலமாகும். கல் நாதசுவரம் உள்ள பெருமையினையும் இக்கோயில் பெற்றுள்ளது.

முதலில் அழைப்பிதழை காணுங்கள்.





இதோ தல வரலாறு இனி காண இருக்கின்றோம்.பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இறைவன் தந்த அமுதகலசம் தங்கியதால் இத்தலம் கும்பகோணம் எனப் பெயர் பெற்றதென்பது தொன்நம்பிக்கை. கும்பத்தில் இருந்த அமுதத்தினின்றும் வெளிப்பட்டவராதலால், இக்கோவிலில் குடிகொண்டுள்ள இறைவன் கும்பேசர் என அழைக்கப்படுகிறார். இவ்வரலாற்றைக் கும்பகோணத் தலபுராணம் கூறுகிறது. பிரளய காலத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் மூக்கின் வழியே அமுதம் பரவியதால் குடமூக்கு என்று சொல்லப்படும் இக்கோயில் ஏற்பட்டது. அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருள்களான மாயிலை, தர்ப்பை, உறி, வில்வம், தேங்காய், பூணூல், முதலிய பொருள்கள் காற்றினால் சிதைக்கப்பட்டு, அவை விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக்கோயில்களாக விளங்குகின்றன.

இத்தலத்து இறைவன் ஆதிகும்பேஸ்வரர், அமுதகும்பேஸ்வரர், அமுதேசர் என அழைக்கப்படுகிறார். உலகிற்கு ஆதிகாரணமாகிய பராபரம் கும்பத்தில் இருந்து தோன்றியதால் ஆதிகும்பேசுவரர் என்றும், நிறைந்த அமுதத்திலிருந்து உதித்ததால் அமுதேசர் என்றும் அழைக்கப்படுகின்றார். திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தில் இறைவனை குழகன் என்றும் காட்டுகின்றார். சிவபெருமான் வேடர் உருவத்தில் தோன்றி அமுத கும்பத்தை அம்பால் எய்தபோது கிராதமூர்த்தி என்ற (வேடர்) பெயரைப் பெற்றார். மகா பிரளயத்திற்குப் பிறகு படைப்புத் தொழிலை பிரம்ம தேவன் தொடங்குவதற்கு, இறைவர் இத்தலத்தில் எழுந்தருளி லிங்கத்துள் உறைந்து சுயம்பு வடிவானவர்.



இத்தலத்து இறைவி மங்கள நாயகி, மந்திர பீடேசுவரி, மந்திரபீட நலத்தள், வளர்மங்கை என அழைக்கப்படுகிறார். தம்மை அன்போடு தொழுவார்க்குத் திவ்விய மங்களத்தை அருளும் மாட்சியமையால் மங்களநாயகி என்றும், சக்திபீடங்களுள் ஒன்றான மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர பீடேசுவரி என்றும், தம் திருவடிகள் அடைந்தவர்களுக்கு மந்திரபீடத்தில் இருந்து நலம் தருதலால மந்திரபீட நலத்தள் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தம்மை வணங்குவோருடைய நோய்களைப் போக்கச் செய்வதால் நோயறுக்கும் பரை என்றப் பெயரும் வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தல அம்பாளை வளர்மங்கை என தேவாரப்பதிகத்தில் குறிக்கின்றார். இறைவன் திருச்செங்கோட்டுத்தலத்தில் தம்முடைய சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு அளித்தது போன்று, இத்தலத்தில் தம்முடைய 36,000 கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு வழங்கியதால் அம்பாள் மந்திரபீடேசுவரியாகத் திகழ்கின்றாள். அத்துடன் தமக்குரிய 36,000 கோடி மந்திர சக்திகளையும் சேர்த்து, இந்தியாவிலுள்ள சக்திபீடங்களுக்கும் முதன்மையான சக்திபீடமாகி, 72,000 கோடி சக்திகளுக்கு அதிபதியாக அருள்பாலிக்கின்றாள். அம்பாளின் உடற்பாகம் பாதநகம் முதல் உச்சிமுடி வரை 51 சக்தி வடிவ பாகங்களாகக் காட்சியளிக்கின்றன. மற்றைய தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவை மட்டும் கொண்டது. இத்தலத்து அம்பாள், 51 சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாய் உள்ளடக்கி சக்தி பீடங்களுக்கெல்லாம் தலையாயதாக விளங்கி அருள் பாலிக்கின்றாள்.

மாசி மகத்தன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பங்குனி மாதத்தில் மகாமக குளத்தில் தெப்பத்திருவிழாவும், சித்திரையில் சப்தஸ்தானம் என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்விழாவின் போது சுவாமியும் அம்பாளும் 20 கி.மீ, தூரத்தில் உள்ள ஏழு தலங்களுக்கு எழுந்தருளுவார்கள். 

வைகாசியில் திருக்கல்யாணம், ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பதினெட்டாம் பெருக்கு, ஆடிப்பூரம், பங்குனித்திருவிழா ஆகியவை கொண்டாடப்படுகிறது. 

மாசி மாதம் அசுவதி நட்சத்திரத்தில் கொடி ஏறி, எட்டாம் நாளில் வெண்ணெய்த்தாழி நிகழ்ச்சியும், ஒன்பதாம் நாளில் தேரோட்டமும், பத்தாம் நாளில் மூஷிக, மயில், ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கும். 

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக திருவிழா ஆதி கும்பேஸ்வரர் கோயிலின் சார்பிலேயே நடத்தப்படும். தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா இது.


 கோயிலை பிரகாரம் சுற்றி வரும் போது இங்கே நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் சன்னிதி கண்டோம். இதோ நீங்களும் தரிசித்து மகிழுங்கள்.













கோயில் நகரம் என்று புகழப்படும் கும்பகோணத்தில் பாடல் பெற்ற தலமும், மாசி மகமும் மஹா மகமும் சிறப்பாக கொண்டாப்படும்  கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயிலில் நம் குருநாதர் தரிசனம் பெறுவது நாம் செய்த புண்ணியமே. இங்கு நாளை  09.01.2023 அன்று ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற உள்ளது. வழக்கம் போல் கீழே அழைப்பிதழ் இணைத்துள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.



அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 11 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2023/01/11.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 09.01.2023 - https://tut-temples.blogspot.com/2022/12/09012023_25.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 09.01.2023  - https://tut-temples.blogspot.com/2022/12/09012023.html

கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் குரு பூஜை - 5 ஆம் ஆண்டு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/5-23122021.html

அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்! - மார்கழி ஆயில்ய வழிபாடு - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_22.html

 கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் - ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_22.html

செங்கல்பட்டு அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபை - மார்கழி ஆயில்ய வழிபாடு - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_21.html

சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாண தரிசனத்திற்கு வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_27.html

TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_42.html

ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_54.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

No comments:

Post a Comment