அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
2022 ஆம் ஆண்டில் கடைசி மாதத்தில் இருக்கின்றோம். தற்போது தான் 2022 ஆம் ஆண்டு பிறந்தது போன்று இருந்தது. அதற்குள் 2022 ஆம் வருடத்தின் இறுதியில் நகர்ந்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நாள் நாட்காட்டி தேதி
பார்க்கும் போது நாம் இன்னும் செய்ய வேண்டிய சேவைகள் அதிகமாக உள்ளது. நம்
குழுவை மருத்துவ சேவையில் ஈடுபடும்படி நம் குருநாதர் 2019 ஆண்டில்
கூறினார்கள். சென்ற ஆண்டில் மருத்துவ சேவையாக மூலிகை கசாயம் கொடுக்கும் சேவை
கூடுவாஞ்சேரியில் தொடர்ந்து வருகின்றது. அன்னசேவை, தீப வழிபாடு , ஆயில்ய ஆராதனை,
ஆலயங்களுக்கு தீப எண்ணெய் வழங்குதல்,மருத்துவ உதவி, தினசரி கூட்டுப் பிரார்த்தனை என அனைத்தும் உங்கள் அனைவரின் பொருளுதவியால்
நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டில் 4 தல யாத்திரை குருவருளால் நடைபெற்றது. நவ கைலாயம், நவ திருப்பதி, மதுரை & திருஅண்ணாமலை என ஒவ்வொரு யாத்திரையும் சிறப்பாக அமைந்தது. இது இந்த ஆண்டில் நம் குழுவின் புதிய மைல்கல் என்று கூறலாம். அதே போன்று தினசரி கூட்டுப்பிரார்தனை குருவருளால் சில நாட்களுக்கு முன்னர் 300 ஆவது நாளை தாண்டி, திருப்புகழ் படித்து சிரமேற்கொண்டு நடைபெற்று வருகின்றது.
அதே போல் சென்ற ஆண்டு நம்
தளத்தின் தரிசனப் பதிவுகள் என பல பதிவுகள் இன்னும் நம் கையில் உள்ளது. நம்
கையில் உள்ள பதிவுகளை உங்கள் இதயத்தில் இடம்பெற விரைவில் முயற்சி
செய்கின்றோம்.
இன்றைய சிறப்பு நாளில் பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்சுவாமிகளின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்று குருவைப் போற்றுவோம். திரு அண்ணாமலையார் என்று அன்புடன் ஸ்ரீ மகா பெரியவா அவர்களால் அழைக்கப்பட்டவர் யோகி ராம் சுரத்குமார்
யோகி ராம் சுரத்குமார் யோகி ராம்சுரத் குமார் யோகி ராம்சுரத் குமார் ஜெய குரு ராயா!

"சுவாமி உண்மையில் நீங்கள் யார்? நீங்கள் துறவி இல்லை. சந்நியாசி இல்லை. சொல்லில் விளையாடும் இறை போதகர் இல்லை. உங்களிடம் சம்பிரதாயங்கள் இல்லை. சடங்குகளோ, நியமங்களோ இல்லை. மத நாற்றம் இல்லை. எந்த விதமான தர்மசேவைகளும் நீங்கள் புரிவதில்லை. தியானமோ, யோகமோ எதுவும் செய்யவும் இல்லை, செய்யச் சொல்லவும் இல்லை. அனுஷ்டானங்கள் செய்வதில்லை. ஏன் ஸ்நானம் கூடச் செய்வதில்லை. யாருக்கும் எதையும் போதிக்கவில்லை. நீங்கள் உண்மையில் யார் சுவாமி? ஏனோ என் ஆழ்மனதில் உங்களைக் காணவேண்டும், உங்களுடனேயே சர்வ காலமும் இருக்க வேண்டும் என்று வெறித்தனமான வேகம் மட்டும் பிறக்கிறது. உங்கள் நாமம் நான் இதுவரை உச்சாடனம் செய்துவந்த மற்ற நாமத்தை விடச் சொல்வதற்குச் சுகமாக இருக்கிறது. எப்பொழுதும் சொல்ல மனமும் விழைகிறது. என்னுள் நீங்கள் எதுவும் செய்யாமலே மாற்றங்கள் புரிகிறீர்கள். தங்களைத் தரிசிக்கும்போது நான் காணாமல் போய்விடுகிறேன். என் எண்ண ஓட்டங்களும் ஓய்ந்து விடுகிறது. நீங்கள் யார் சுவாமி?"

"இந்த பிச்சைக்காரனை யார் எனக் கேட்டாய். உன் கண்கள் என்னையே பார்க்கட்டும். உன் எண்ணங்கள் என்னையே சுற்றிவரட்டும். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு ஒரு முறையே இந்த பிச்சைக்காரன் போன்றோர் இவ்வுலகிற்கு வருவார்கள். எனவே நன்கு பார்த்துக்கொள். இந்த பிச்சைக்காரன் பேசும் தோற்றத்தையோ, நடக்கும் தோற்றத்தையோ, அமரும் தோற்றத்தையோ, சிரிக்கும் தோற்றத்தையோ, அழுகின்ற தோற்றத்தையோ, உக்கிரமாக இருக்கும் தோற்றத்தையோ, அன்பர்களோடு அளவளாவும் தோற்றத்தையோ, இந்த பிச்சைக்காரனின் ஏதோவொரு தோற்றத்தையோ உன்னுள் இருத்திக் கொள். அதுவே தவமாகும். அதுவே தெய்வ தரிசனமாகும். அதுவே மனித வாழ்வின் குறிக்கோளும் ஆகும். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதே நண்பா. இந்த பிச்சைக்காரனை ஸுவீகரித்துவிடு. உன்மயமாக்கிக்கொள். இந்த பிச்சைக்காரனை விழுங்கிவிடு நண்பா."
திருவண்ணாமலை, அற்புதமான புண்ணிய பூமி. பகவான் ஸ்ரீரமணர், ஸ்ரீசேஷாத்ரி
சுவாமிகள்... என மகான்களின் திருப்பாதம்பட்ட மண். காசியில் இருந்து வந்து
திருவண்ணாமலையிலேயே தங்கி, பக்தர்களுக்கு அருளியவர் `விசிறி சாமியார்’ என
அழைக்கப்படும் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார்.
ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து ஞானத்தையும், ரமண மகரிஷியிடமிருந்து தவத்தையும்,
சுவாமி ராமதாஸரிடமிருந்து பக்திநெறியையும் கேட்டுத் தெளிந்தார். குரு
ராமதாஸரிடமிருந்து, 'ஓம் ஶ்ரீ ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்' எனும் மந்திர தீட்சை
பெற்றார்.யோகி ராம்சுரத்குமார் சித்தியடையும் வரை இந்த மந்திரத்தை
ஜெபித்துக்கொண்டே இருந்தார். தமிழ் மண்ணில் பிறக்க நாம் புண்ணியம் செய்து
இருக்க வேண்டும். ஒரு மகான் வடக்கில் பிறந்து, தெற்கில் நம் மண்ணில் வந்து
சித்தி அடைவதென்றால் ஏன்? நமக்காக தானே. நாம் உண்மை நிலை உணர தானே.
யோகியின் வழியில் நாமும் மந்திர ஜெபத்தை பிடிப்போம்.
இங்கு பதிவேற்றம் செய்து உள்ள காட்சிகள் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாம் கண்டது. நம் அன்பர் திரு.
ஹரிஹரன் அவர்கள்
இரண்டு ஆண்டுகளாக நம்மை கூடுவாஞ்சேரியில் யோகியாரின் ஆசிரமம்
உள்ளது,சென்று தரிசியுங்கள் என்றார். நாமும் எங்கெங்கோ தேடி கடைசியில்
கண்டோம், அருள் பெற்றோம்.
திருவண்ணாமலை செங்கம் ரோடில் சுவாமிகளின் ஆஸ்ரமம் உள்ளது. அங்கே அவருடைய சமாதியும், உருவச் சிலையும் அழகாகத் திகழ்கின்றன. தினசரி வழிபாடும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவருடைய பக்தர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
“ யோகி ராம்சுரத்குமார்!
யோகி ராம்சுரத்குமார்!
யோகி ராம்சுரத்குமார்! ”
என்று மூன்று முறை அழைத்தால் போதும். இந்தப் பிச்சைக்காரன் நீங்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும், எந்தப் பிரச்சனை இருந்தாலும் நிச்சயமாக வந்து உதவி செய்வான்” என்று அந்த மகான் சத்தியம் செய்திருக்கிறார். அது இன்றளவும் அவருடைய பக்தர்களின் வாழ்க்கையில் நடந்து வருகிறது.
நீங்களும் மனம் ஒருமித்து அவர் பெயரைக் கூப்பிடுங்கள்; உங்களுக்கும் நல்லது நடக்கும்.
ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் பணிந்து
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html
நினைத்ததை
நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் -
04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html
No comments:
Post a Comment