"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, September 22, 2022

தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் நம் தளம் சார்பில் அனைத்து அறப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது  மகாளய பட்ச சேவையாக நம் தளம் சார்பில் கடந்த 11.09.22 முதல் இனிப்புடன் கூடிய அன்னசேவையும், கோமாதாக்களுக்கு வாழைப்பழங்களும் கொடுத்து வருகின்றோம். புரட்டாசி  மாத ஆயில்ய பூஜை நேற்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. இன்றைய பதிவில் மீண்டும்  நேற்றைய குருநாதர் தரிசனம் காண இருக்கின்றோம்.


கூடுவாஞ்சேரி குருவின் தரிசனம். வழக்கமாக அனைவருக்கும் பிரார்த்தனை செய்யப்பட்டது. மேலும் நேற்றைய மாலை கூட்டு வழிபாட்டிலும் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ! பழநி திருப்புகழ் படித்து பிராரத்தனை செய்யும் வாய்ப்பு குருவருளால் நமக்கு வழங்கப்பட்டது. 


அடுத்து மதுரை பசுமலை ஸ்ரீ அகஸ்தியரின் தரிசனம் பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். புரட்டாசி ஆயில்யம் என்றாலே இங்கு சிறப்பு தான். சென்ற ஆண்டில் நம் தளம் சார்பில் மதுரை பசுமலை ஸ்ரீ அகஸ்தியர் தரிசனம் பெற்றது இன்னும் நம் மனதில் நிறைவாக இருக்கின்றது. இந்த முறை அந்த வாய்ப்பு நேரில் கிட்டவில்லை என்றாலும் குருவருளால் எப்படியோ தரிசனம் பெற்றுவிட்டோம். 

தெளிவு குருவின் திருமேனி காண்டல் என்பதற்கிணங்க குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் தரிசனம் அனைவரும் பெற்று வருகின்றோம். அடுத்து தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் என்று தினமும் கூட்டு வழிபாட்டில் குருவின் நாமம் சொல்லி வருகின்றோம். அடுத்து தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் என்பதற்கிணங்க குருநாதர் கூறி வரும் ஜீவ வாக்கை கேட்டு, அவ்வப்போது செய்து வருகின்றோம். தமிழ்பாராயண திரட்டு என்ற பதிவில் அளித்த வாக்கை இங்கே மீண்டும் தருகின்றோம்.


"வரும் புரட்டாசி மாத மஹாளய அமாவாசைக்கு ஒன்பது நாள் முன்பிருந்து இயலாதவர்களுக்கு அன்னமிட்டு, தான தர்மங்கள் செய்து அமாவாசை தினத்தன்று முன்னோர்களையும் குலதெய்வத்தையும் வணங்கி அன்றைய தினமும் இயலாதவர்களுக்கும் ஏழை எளியோர்களுக்கும் அன்னதானமும் கோமாதாவிற்கும் உணவும் இனிப்புகளையும் பரிமாறி தர்மங்கள் செய்திடல் வேண்டும்" என்று அகத்தியபெருமான் உரைத்திருக்கின்றார்

இதை எத்தனை நாட்கள் செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு குருநாதர் அகத்தியபெருமான் "அப்பனே! நீங்கள் அனைவரும் கடைநாள் வரையிலும் இப்படி செய்து தர்மங்களை கடைபிடித்து வந்தாலே பெரும் புண்ணியமப்பா! கர்மாக்களை அழித்து விட முடியும் அப்பனே!" என தெரிவித்துள்ளார்.

இதை அடியவர்கள் அனைவரும் நல்முறையாய் கடைபிடித்து குருவருளும் இறையருளும் பெறுவோம் .

அன்னமிட அகத்தியர் உத்தரவு!

"புரட்டாசி மாத மஹாளய அமாவாசைக்கு ஒன்பது நாள் முன்பிருந்து இயலாதவர்களுக்கு அன்னமிட்டு, தான தர்மங்கள் செய்து அமாவாசை தினத்தன்று முன்னோர்களையும் குலதெய்வத்தையும் வணங்கி அன்றைய தினமும் இயலாதவர்களுக்கும் ஏழை எளியோர்களுக்கும் அன்னதானமும் கோமாதாவிற்கும் உணவும் இனிப்புகளையும் பரிமாறி தர்மங்கள் செய்திடல் வேண்டும்."

அந்த முதல் நாள் இன்று(16/09/2022) தொடங்குகிறது. ஏதேனும் ஒரு ஜீவனுக்கு சிறிதளவு அன்னம் கொடுத்து, அகத்தியப்பெருமானின் அருளை பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறி, ஞாபகப்படுத்திட இந்த தொகுப்பு. இன்று முதல் 10 நாட்கள்.

நாம் இன்னும் மூன்றாது நிலையை சரிவர பின்பற்றி அடுத்த நிலையான தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே செல்ல முடியும்.

தொகுத்து கூற வேண்டும் என்றால் 

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல் 
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் 
தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல்தானே

என்று திருமந்திரம் குருவின் மகிமையை சொல்கின்றது. மேம்போக்காக பார்த்தால் குருவின் திருமேனி காண்பது, குருவின் திருநாமம் சொல்வது, குருவின் வார்த்தை கேட்டல், குருவின் திரு உரு சிந்தித்தால் தெளிவு பிறக்கும் என்பது தெளிவாக நமக்கு புரிகின்றது. மீண்டும் முதல் வரியையும், நான்காம் வரியையும் பாருங்கள். குருவின் திருமேனி, குருவின் திரு உரு வேறு விதமாக பொருள் வருகின்றது அல்லவா? இங்கே குருவின் திருஉரு என்பது குருவின் உபதேசம் ஆகும். இது மிக மிக கடினம் ஆகும். ஆம். முதலில் குருவை காண்பது , அவர் நாமம் சொல்வது, அவரது திருவார்த்தை கேட்பது என அனைத்தும் எளிதாக பெறலாம். ஆனால் குருவின் திருஉரு கிடைப்பது அரிதினும் அரிதாம். அவ்வாறு கிடைத்த குருவின் திருஉருவை சிந்திப்பது அதனினும் அரிதாம்.

இதற்கு  முந்தைய இரு பதிவுகளில் குரு உபதேசம் என்றதலைப்பில் ஒரு ஒற்றுமை உண்டு என்று கூறி இருந்தோம். முதல் பதிவில் குருவருளால் ஸ்ரீ முருகப் பெருமான் உபதேசமாக மனதை திறக்க வேண்டிய மந்திர உபதேசம் கிடைத்தது. மீண்டும் அவற்றை இங்கே பகிர்கின்றோம்.







குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் வாக்கிற்கிணங்க, ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் மூலம் இங்கே இரண்டு முருகர் மந்திரங்களை தருகின்றோம். அடியார்கள் அனைவரும் காலை பிரம்ம முகூர்த்தம் முன்னர் இந்த இரண்டு மந்திரங்களை 108 முறை என்ற அளவில், பின்னர் 18 ன் மடங்காக அதிகப்படுத்தி உச்சரித்து எல்லா உயிர்களிலும் இன்புற்று வாழ பிரார்த்தனை செய்து வாருங்கள். இவற்றை நித்திய வழிபாட்டிலும் இணைத்துக் கொள்ளலாம்.







இதற்கு முந்தைய பதிவான குரு உபதேசம் பதிவானது சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலில் இருந்தும் அருளப்பட்டது. அன்றைய தினம் அங்கே திருவாசக முற்றோதல் நடைபெற்றது. இரண்டு குரு உபதேசம் பதிவுகளும் சின்னாளப்பட்டி ஸ்ரீ அகத்தியர் ஞானக்குடில் தொடர்பில் இருப்பதை பார்க்கும் போது காரணமின்றி காரியமில்லை என்பது தெளிவாக புரிகின்றது.

ஞானத்தை பெற வேண்டும். அதுவும் நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் ஞானத்தை பெற வேண்டும். இதனை அருணகிரிநாதரும் திருப்புகழில் கேட்கின்றார்.



தான தனத் ...... தனதான

......... பாடல் .........

காலனிடத் ...... தணுகாதே

காசினியிற் ...... பிறவாதே

சீலஅகத் ...... தியஞான

தேனமுதைத் ...... தருவாயே

மாலயனுக் ...... கரியானே

மாதவரைப் ...... பிரியானே

நாலுமறைப் ...... பொருளானே

நாககிரிப் ...... பெருமாளே.

நாமும் அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே என்று கேட்போம்.

ஓம் குருவே சரணம்! ஓம் குருமார்களின் பதம் போற்றி!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் இன்னும் பேசுவோம்.


மீள்பதிவாக:-

குரு உபதேசம் - ஓம் ஸ்ரீம் அம் அகத்தீஸ்வராய நம! - https://tut-temples.blogspot.com/2022/09/blog-post_13.html

குரு உபதேசம் - ஓம் அகத்தீசாய நம! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post_14.html

வள்ளலாரும் அகத்தியரும்! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post.html

குருவே சரணம் - ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் அவதார திருநாள் - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post.html

ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம் - திருப்பாடகம் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_13.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html

No comments:

Post a Comment