இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருநாதர்
அருளால் வழக்கம் போல்
நம் தளத்தின் சேவைகள் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நாளும் நம்மை நம்
குருநாதர் வழிநடத்தி வருவதை பார்க்கும் போது,இறைவா! அனைத்தும் நீயே!
தெய்வமே! குருநாதா!! என்று மனதுள் அவ்வப்போது வேண்டி வருகின்றோம். இதனை
எப்போதும் வேண்ட நம் மனதில் இருத்த முயற்சித்து வருகின்றோம். குருநாதரின்
உத்தரவாக இன்றைய பதிவை சித்தன் அருள் - 1758,1783,1780,1777 - அன்புடன் அகத்தியர் - தொகுப்பில் இருந்து குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய விளக்கங்களை காண உள்ளோம். இந்த தொகுப்பில் நம் குருநாதர் அகத்தியர் பெருமான் ஏன் நவகிரக தீபம் நம்மை ஏற்ற சொன்னார் என்பதை இங்கே நாம் கண்டு தெளிய வேண்டும் .
கேள்வி:
சமீபகாலத்தில், வாமாசாரத்தின் பூஜைகள், சக்தி, ஏவல் போன்றவை நிறையவே தலை
தூக்கி வருவதாக தெரிகிறது. அதன் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு எடுத்துக்
கொள்ள ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும்?
1. 108
மூலிகைகளை நல் முறைகளாக ஹோமத்தில் இட்டு, பரிபூரணமாக எரிய வைத்து, அது
நன்றாக பஸ்பமாகிய பிறகு, அதனுடன், மஞ்சள், குங்குமம், விபூதி பிரசாதங்களை
சேர்த்து, குலதெய்வக் கோவிலிலிருந்து சிறிதளவு மண்ணை எடுத்து, நன்
முறையாகவே பச்சை கற்பூரத்தை அதில் இட்டு, ஒரு துணியில் கட்டி, அனுதினமும்
குலதெய்வத்தை நினைத்து பூஜைகள் செய்து வர, அதனுடன் மண் தட்டில் பசும்
சாணியில் உருவான விபூதியில், ருத்திராக்ஷத்தை வைத்து, அதன் அருகே,
இப்பொழுது சொன்னேனே அந்த மூட்டையை வைத்துவிட்டு அனுதினமும் பூஜைகள் செய்து
வந்தாலே போதுமானதப்பா. அதாவது தூப, தீபம் காட்டி வந்தாலே போதுமானது அப்பா.
மிகுந்த பலமாக மந்திர ஜபம் செய்து வந்தால், எவன் அதை செய்தானோ அவனை சென்று
பலமாக தாக்கும், அவன் குடும்பத்தையே அழித்துவிடுமப்பா. ஆனால், அனைவரும்
நன்றாக இருக்க வேண்டும் என சித்தர்கள் விரும்புவதால், அப்படிப்பட்ட
மனிதர்களுக்கு நிறையவே வாய்ப்பை கொடுக்கிறோம்.
2.
அனுதினமும் சுதர்சன மந்திரத்தை 108 முறை உருவேற்றி, முன்னர் கூறிய 108
மூலிகை பஸ்மத்தை நெய் விட்டு குழைத்து உச்சந்தலையில் வைத்துக் கொண்டு
சென்றால் எதுவும் அண்டாதப்பா.
3. மனிதன்
திருந்தட்டும் என்று நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறோம் அப்பனே.
அதிகமானால், இன்னும் செப்புகிறோம். திருந்தவில்லை என்றால் அம்மந்திரத்தை
யான் செப்புகிறேன்.
கேள்வி: வீட்டில் இருக்கும்
பொழுது செய்ய வேண்டியதை நீங்கள் கூறினீர்கள். இந்த காலத்தில் ஆண்களும்,
பெண்களும் வெளியில் சென்று வேலைக்கு போக வேண்டியுள்ளது. அவர்கள் என்ன செய்ய
வேண்டும்?
இதற்காகத்தான் சற்று முன்னரே
ருத்திராக்ஷத்தை அணிய வேண்டும் என்று கூறினேன். ஒரு ருத்திராக்ஷத்தை
கழுத்தில் அணிய வேண்டும். இன்னொரு ருத்திராக்ஷத்தை தண்ணீரில் இட்டு,
மறுநாள் சூரிய உதயத்திற்கு முன் அந்த நீரை பருக வேண்டும். இப்படி பருகிவர
அனைத்து விஷயங்களும் தெரிய வரும். ஈசனுக்கு அபிஷேகம் செய்த நீராக மாறி அது
குடிக்கின்ற நீராக மாறும். இதனால், அதை பருகுகிறவரை யாரும் அண்ட
முடியாதப்பா. இதை சிரமப்பட்டாகிலும் செய்ய வேண்டும்.
இன்னும்
எத்தனையோ திருத்தலங்கள் உள்ளது என்பேன். அங்கெல்லாம் சென்று வர, எந்த
தீவினையும் பாதிக்காது. ப்ரத்தியங்கிரா தேவி கோவில், கும்பகோணம்,
சோற்றானிக்கரை கோவில், கேரளம், கொடுங்கல்லூர் தேவி கோவில், கேரளம், தில்லை
காளி கோவில், போன்றவை மிக பலம் பொருந்திய கோவில்கள். இங்கெல்லாம் சென்று
வந்தாலே, எதுவும் தாக்காதப்பா.
கேள்வி:
சித்தர்கள் சொல்கிறபடி நடந்து அவர்கள் கூடவே போய்க்கொண்டிருந்தாலும்,
வாமாச்சாரத்தின் பாதிப்பை ஒரு மனிதன் எதிர் கொள்ளத்தான் வேண்டியுள்ளது,
ஏன்?
ஏற்கனவே கூறிவிட்டேன். இறைவனாயினும், உடம்பை
பெற்றுவிட்டாலே, இதை அனுபவிக்கத்தான் வேண்டும். அவ்வளவுதான். இதற்கு பல
காரணங்கள் உள்ளது. உடம்பு ஒன்று இருந்தால் பாபம் என்ற ஒன்று இருக்கும்.
இறைவன் ஒருவனை ஆட்கொள்ளும் பொழுது தான் துன்பமே வருகின்றது.
கேள்வி;
ஒரு மனிதன் தான் நல்லவனா, கெட்டவனா என்பதை அவன் மனசாட்சி தான் உண்மையாக
சொல்லும். உதாரணமாக, நான் நல்லவனா என்பதை இறைவனும் சித்தர்களும் தான் கூற
வேண்டும். ஆனால், நான் கெட்டவன் இல்லை/கெட்டவன்தான் என்பதை எந்நாளும்
தீர்மானிக்க முடியும். ஒரு புண்ணிய தலத்தில் கெட்டவர்கள் கை ஓங்கி
இருக்கவும், எளியோர்கள் அத்தனை சிரமங்களையும் அனுபவிப்பதை இறைவன்
பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்?
அகத்தியர்: இறைவன் ஏன் மனிதனை படைக்கிறான்? ஏன் தவறு செய்பவர்களை ஊக்குவிக்கிறான், என்று கூறு!
அடியவர்: அவருக்கு தன் திருவிளையாடலை நடந்த மனிதர்களும், கெட்டவர்களும் தேவை, அதனால்.
அகத்தியர்:
ஆம். அனைவரும் கர்மாவில் விழுந்து சிரமங்களை அனுபவிக்கும் பொழுதுதான்
சித்தர்கள் அவர்களிடம் வருவார்கள். யாருக்கு சித்தர்கள் மனமிறங்குவார்கள்?
துன்பத்தில் உழல்பவர்களுக்குத்தான். துன்பம் வந்தவனுக்குத்தான் உண்மைகளை
உணர்ந்து கொள்ள முடியும். மனிதன் எத்தனையோ பிறவிகள் எடுக்கிறான். உடலை
நீத்தபின், இவ் ஆத்மா, அழுது கொண்டே போகுமப்பா. ஆனாலும் யாங்கள்
வழியிலிருப்போம். ஐயோ! இவன் இவ்வாறு எல்லாம் பாபங்கள் செய்து விட்டானே
என்று. மீண்டும், எங்களை தாண்டித்தான் இவ் ஆன்மா செல்லவேண்டும் அப்பனே.
சிலபேருக்கு தெரியுமப்பா. எங்கள் கைகளை பிடித்துக் கொண்டு அழும் போது,
நிச்சயம் அடுத்த பிறவியில் யான் வந்து வழி காட்டுகிறேன் என்று கூறுவேன்.
அதனால் தான் இப்பொழுதும் வந்து வழி காட்டிக் கொண்டிருக்கின்றேன். சித்தன்
யார் என்பதை இன்னும் புரியாத நிலையில்தான் இருக்கின்றான் மனிதன். புரிந்து
கொண்டால், ஒன்று அவன் இறக்க வேண்டும், அல்லது சன்யாசம் வாங்கி காட்டில் போக
வேண்டும். சித்தனுக்கு எதுவுமே தேவை இல்லை. மனிதன் மனசாட்ச்சியோடு
வாழ்ந்தால் போதுமப்பா. அப்பனே துன்பத்தை கடந்து வந்துவிட்டால், நாள் ஏது,
கோள் ஏது, நட்சத்திரம் ஏது, இறைவனும் ஏதப்பா?
கேள்வி:
இறைவன் எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார், என்ன செய்து
கொண்டிருக்கிறார் என்பதை மனிதனுக்கு உணர்த்திவிட்டால், அவன் பிற மனிதர்கள்
கூறுவதை கேட்டுக்கொண்டு செல்ல மாட்டான் அல்லவா?
அகத்தியர்:
நாங்கள் தான் அதற்கான வழியை காட்டி கூறுகின்றோமே. இருந்தாலும் இவன் பிற
மனிதன் கூறுவதை நம்பி சென்று கர்மாவை வாங்கிக்கொள்கிறான். அப்பனே! மனிதன்
துன்பப்பட வேண்டும். துன்பப் பட்டுவிட்டால், நீ எங்கு அமர்ந்திருந்தாலும்,
இறைவன் அங்கு வருவானப்பா. இறைவன் தாயை போன்றவன். நீ அழைத்தால் வராமல்
இருப்பானா? தவறு செய்கிற மனிதனை கூட இழுத்து வந்து புத்திகள் கூறிக்
கொண்டிருக்கின்றோம். அப்பனே! எங்களுக்கு அனைத்தும் ஒன்றுதான் அப்பனே.
அப்பனே, முடிந்தால் சொல்லித் திருத்துவோம். முடியாவிட்டால், அடித்து
திருத்துவோம், அவ்வளவுதான். எங்களை தேடி வந்து பின்பற்றுபவர்களும் கூட
தவறு செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். பொறுத்துக்க கொண்டு
இருக்கின்றோம். மனிதன் உடனேயே தண்டனை கொடுத்து விடுவான். யாங்கள்
பொறுத்துக்கொண்டு இருக்கின்றோம். தண்டனை கொடுத்தால், ஒரு போதும் மறக்க
மாட்டானப்பா!
பெற்றோரையும்,
இல்லறத்தையும் விட்டு விட்டு என்னை வந்து வணங்கினால், கொடுப்பதற்கு நான்
என்ன முட்டாளா? முதலில் உன் கடமைகளை ஒழுங்காக செய். அவனை நோக்கி யான்
இல்லத்தை தேடி வருவேனப்பா. அனைவர் மனதையும் புண் படுத்தி, தாய்
தந்தையரையும் புண்படுத்தி வாழ்ந்தால், இறைவன் கூட ஏற்றுக் கொள்ள
மாட்டானப்பா. நீ வேண்டுமானால் கூறி கொள்ளலாம் நான் சித்தனின் பக்தன்
என்று.
கேள்வி: இறைவன், நல்ல விஷயங்களை நடத்திக் கொடுத்து, மனிதனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆனால் அதை செய்வதில்லையே!
அகத்தியர்:
இறைவனும், சித்தர்களும், மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை செய்து கொண்டுதான்
இருக்கிறார்கள், நல்ல செய்தியை சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
ஆனால், தவறான மனிதர்கள்தான் இதை எதிர்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
ஆயிரம் சதவிகிதம் சக்தி உள்ள ஒருவனிடம் தான் இப்படிப்பட்ட நல்ல விஷயங்களை
கொடுக்க முடியும். அதுவே நூறு சதவிகிதம் உள்ளவர்களிடம் கொடுத்தால் என்ன
ஆகும். அவனே அழிந்துவிடுவான். கொடுத்த எண்ணம் நிறைவேறாமல் போய்விடும்.
அப்படிப்பட்ட மனிதன் பிறக்கும் பொழுதே கண்டுபிடித்து அவனுள் இந்த சக்தியை
புகுத்தி விடுவதே சித்தர்கள்/யாங்கள் தான். இதை கூட மனிதன் புரிந்து
கொள்வதில்லை அப்பா! அதனால் தான், பக்தி என்பதை யாரும் உணரவில்லை அப்பா.
அதனால் தான் நிறைய பேர் ஏமாற்றுகிறார்கள் அப்பா. உண்மை நிலை
புரிந்துவிட்டால், ஐயோ! இறைவன் தண்டித்து விடுவான் என்று பயந்து தவறு செய்ய
மாட்டார்கள் அப்பா. அனைத்தையும் புரிந்து கொள்வதற்கும் கூட புண்ணியங்கள்
வேண்டும் அப்பா.
காசியில், ஈசன் கூட "அகத்தியனே!
அறிவியல் வழியாக நீ என்னை இங்கு வரவை!" என்றான். வரவழைத்தேன் அப்பா.
ஆனாலும் ஒன்றை மட்டும் எடுத்துரைக்கின்றேன். இறைவன் என்பவன் ஒருவன்தான்.
அப்பனே! சித்தனைப்பற்றி பேசுவதற்கும், சித்தனுடன் பேசுவதற்கும், சில
தகுதிகள் வேண்டுமப்பா.
ஆசைகளுடன் திரிந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன். நீ என்ன செய்வாயப்பா?
அடியவர்: நான் உடனே தானம் செய்து விடுவேன்.
அகத்தியர்:
இப்பொழுது தானம், தர்மம் என்று கூறுவாய். பணம் கையில் வந்துவிட்டால் மனது,
வாக்கு மாறிவிடுமப்பா. இந்த யோசனைகள் வராதப்பா. இதனால், வாய்தான்
பேசுகின்றது என்பேன் அப்பனே.
இன்னொரு அடியவர்: மருத்துவ சிகிர்ச்சைக்குப்பின், இன்றுதான் தூர யாத்திரைக்கு சொல்லப்போகிறேன். தாங்கள் அருள் புரிய வேண்டும்!
அகத்தியர்: அப்பனே! செல்லும் இடமெங்கும் யான் இருப்பேன். எங்கு வேண்டுமானாலும் சென்று வா.
அடியவர்: சிவபெருமானுக்குப்/லிங்கத்துக்குப் பின் ஏன் விளக்கேற்றி வைக்கிறார்கள்?
அகத்தியர்: மனிதன் பிறக்கின்றான். அவனுள் ஆத்மா, இந்த விளக்கு போல. இதை ஆழமாக நீ சிந்தித்துக்கொள். புரியும்.
அடியவர்: திருவண்ணாமலையில் ஏன் இறைவனுக்கு தாரை அபிஷேகம் இல்லை?
அகத்தியர்:
இதை பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். பஞ்ச பூதங்கள் ஐந்தும் சேர்ந்ததுதான்
அண்ணாமலையார். அக்னிக்குள் அனைத்தும் அடக்கம். இதை ஏற்கனவே உனக்கு
காட்டிக்கொடுத்து விட்டார். ஒவ்வொன்றையும் தனித்தனியாக செய்த பொழுதே உன்னை
பிடித்து ஆட்டிவிட்டான். அன்றே இதை உணர்ந்துவிட்டாய்.
அகத்தியர்: அருணாச்சல புராணம், இதுபோல் ஒரு அருணாச்சலம் வேறு உலகத்தில் இருப்பதாக கூறுகிறதே!
அகத்தியர்:
அருணாச்சலத்திலே, பூமிக்கு கீழே இதுபோல் ஒரு உலகம் இருக்கிறது. அதை பற்றி
யான் பின்னொருமுறை உரைக்கிறேன். அடி முடி காணாத ஒன்று அண்ணாமலை என்றால்
அர்த்தம் என்ன? கண்டுபிடிக்க முடியாது. இதனால் தான், ஈசன் பொறுத்துக்கொண்டு
இருக்கின்றான், கருணை நிறைந்தவன். அதனால் தான் தன்னை நினைக்காமல், பிறர்
நலனுக்காக அனைத்தையும் செய்ய சொல்கின்றேன்.
அடியவர்:
அதர்வண வேத பாதிப்புகளுக்கு எதிராக ஒருவன் தன்னை காப்பாற்றிக்கொள்ள, முன்
காலத்தில் ஒரு மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்துள்ளேன். அதை இந்த
காலத்தில் தற்காப்புக்காக ஜபம் பண்ணலாமா?
அகத்தியர்:
ஜபம் பண்ணலாம். சில மாதங்கள் பொறுத்திரு. யான் கற்றுக் கொடுக்கின்றேன்.
வெளியே செல்லும் பொழுது, இரவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்
என்பதால், ஒரு எலுமிச்சை பழத்தை கொண்டு செல்.
உறங்கும்
பொழுது, ஒரு எலுமிச்சை எடுத்து நிறைய துளையிட்டு, கிராம்பு, பச்சை
கற்பூரம், குலதெய்வத்திடமிருந்து கொண்டு வந்த பிரசாதங்கள், வசம்பு, போன்றவை
அதில் இட்டிட்டு தலைக்கு பக்கத்தில் வைத்துக் கொண்டு உறங்கினால், மறுநாள்
காலை உனக்கு தெரிந்து விடுமப்பா. எலுமிச்சை வாட தொடங்கி, கெட்டுப்போனால்
பாதிப்பு இருக்கின்றது என்று அர்த்தம்.
நம்பிக்கை
இருந்தால் தான் யாங்களே/சித்தர்களே தேடி வருவோம். நம்பிக்கை
இல்லையென்றால், நாங்களே கூறினாலும், இவன் நம்பிக்கை இல்லாதவன், ஒரு சில
சோதனைகள் செய்த பின் தான் இவனுக்கு உரைக்க அனுமதி தருவேன் என்பான், இறைவன்.
ஆதலால் நம்பிக்கையோடு இருங்கள் என்பேன்.
அடியவர்:
நிறைய அடியவர்கள் தாங்களை அணுகி அவர்களுக்கான தனிப்பட்ட வாக்கை கேட்டால்,
வாக்கு கொடுப்பதில்லையே. ஏன் அவர்களையும் வாக்கு கொடுத்து, ஆசீர்வதித்து
கரையேற்றி விடக்கூடாதா?
அகத்தியர்: நிறையவே
கர்மாக்களை சேர்த்துக்கொண்டவர்கள், தனிப்பட்ட வாக்கு கேட்கும் பொழுது,
முதலில் அவர்கள் தங்களை சுத்தப்படுத்திக் கொள்ள பல விஷயங்களை கூறினால்,
எதையுமே மனதிருத்தி, ஆத்மார்த்தமாக கூட செய்வதில்லை. பின் இங்கு வந்து
அகத்தியனுக்கு எங்கு தெரியப்போகிறது என்று வாக்கு கேட்க வரும் பொழுது
மறுபடியும் சுழல விடத்தான் தோன்றும். "செய்" என்று சொன்னால், முழு
நம்பிக்கையுடன், இயன்றவரை நிறைவாக செய்ய வேண்டும். பல திருத்தலங்கள் ஏறி
ஏறி ஏன் செய்யச்சொல்கிறேன் என்றால், கடை நாள் வரை சேவைகள் புரிய
இருக்கின்றதப்பா. ஆதலால், அனைவர்க்கும் வாக்குகள் உண்டு. எப்பொழுது, எங்கு
என்பதை யானே தீர்மானிக்கிறேன். அப்பனே! ஒன்றை சொல்கின்றேன். அனைவரையும்
ஒன்றை (விளக்கு போடுவது) செய்யச் சொல்லியிருக்கிறேன். அதை செய்யச்சொல்
முதலில்.
என் மீது அன்பு காட்டியவர்க்கெல்லாம்,
அவ் அன்புக்கு கட்டுப்பட்டவன் யான் என்பேன். யானே அவர்களை தேடி வந்து
நிச்சயம் சொல்வேன் என்பேன். அவர்கள் என்னை தேடியும் வரவேண்டாம் என்பேன்.
அப்பனே!
எம் மீது நம்பிக்கை இருந்தால், யானே சென்று அறுவை சிகிர்ச்சை செய்வேன்.
முன் காலங்களில் எத்தனை பேருக்கு செய்திருக்கின்றேன் அப்பனே!
சமீபத்தில்,
திருச்செந்தூரில் கடல் பின் வாங்கிய பொழுது, இரண்டு கல்வெட்டுகள்
கிடைத்தது. அவற்றில் ஒன்று சக்தி தீர்த்தமும் இன்னொன்று சிவ தீர்த்தமும்
இருந்ததை குறிப்பிட்டன. மொத்தம் அங்கு எத்தனை தீர்த்தம் உண்டு?
இன்னும்
நிறைய தீர்த்தங்கள் உள்ளது. கடலுக்குள் மிகப்பெரிய பள்ளம் உள்ளதப்பா. இந்த
தீர்த்தங்களில் மூழ்கினால் அனைத்து பாபமும் போய்விடுமப்பா. ஆனால், முருகன்
அதை அனுமதிப்பதில்லை.
மனிதன் எதன் மூலம் ஆசை
படுகின்றானோ, அதன் மூலம் பாபத்தை அனுபவிக்க விதிக்கின்றான். திருமணம்
என்பதும் கர்மாதான். கணவன் அல்லது மனைவி அமைவது வரமா, அல்லது சாபமா என்பதை
இறைவன்தான் தீர்மானிக்க வேண்டும். வரமென்றால் பிழைத்துக்கொள்வார்கள்.
சாபமென்றால் வாழ்க்கை முடிந்துவிட்டது.
அனைவர்
இல்லத்திலும், திருவாசகம், திருப்புகழ், புராணங்கள் இருக்க வேண்டும். இவை
எல்லாம் இருந்தாலே கெட்டது நாடாதப்பா. இவைகள் இருந்தால், அவ்விடத்தில், அதை
எழுதியவர்களே இருப்பார்கள். அப்படி இருக்க, கேட்டது எப்படி நாடும்?
காலத்திற்கும் இவைகள் அழியக்கூடாது என்று தவமிருந்து, இவைகளை
எழுதியுள்ளார்கள்.
மனிதனுக்கு இறைவன் அனைத்தையும் கொடுப்பார், ஆனால் திருப்பியும் எடுத்துக் கொள்வார், ஏன் என்றால், அனைத்தும் அவருடையது.
உண்மை ஞானியிடம் சென்று நீ பொய்யன் என்றால், நான் பொய்யன் தான் என்று ஒத்துக் கொள்வான்.
எத்தனை கோடி மனிதர்கள் இப்புவியில். அதில் ஒருவர் கூடவா, நீங்கள் எதிர்பார்க்கும் தகுதியை பெறவில்லை?
நிச்சயமாக ஆமாம்!
நீங்கள் எதிர் பார்க்கிற அளவுக்கு தங்கமாக இல்லாவிட்டாலும், ஒரு பித்தளையாக கூடவா இல்லை?
செம்பாகவே
இருந்துவிட்டு போகட்டும். அப்படி கூட இங்கு யாரும் இல்லை. அப்பனே!
நிச்சயம், கர்மம் செய்தவன் தான் உடம்பை பெற்றுக் கொள்வான், அப்பனே!
சக்தி
நிறைந்த திருத்தலங்களுக்கு செல்கின்ற ஒருவன், இயல்பாகவே அங்கிருக்கும்,
சக்தியை உடலுக்குள் வாங்கிக் கொள்கிறான். இதற்காகத்தான் பண்டைய காலங்களில்
உலகுக்கு நன்மை செய்திட அனைத்து இடங்களையும் நாடினார்கள்.
கோவிலுக்கு
செல்லும் பொழுது, அங்கிருக்கும் நவகிரகங்களை தரிசிக்காமல், எனக்கு இறைவன்
போதும், என்று சென்றால், நவகிரகங்கள் ஒரு மனிதனை என்ன செய்து விட முடியும்?
இறைவன்
தான் எனக்கு தேவை, நீங்கள் உங்களிடத்தில் இருந்து உங்கள் வேலையை பாருங்கள்
என நினைத்து இறைவனை நாடினால், நவகிரகங்களே, விலகி வழி விடும்.
அப்பனே!
அனைவருக்கும் சொந்தக்காரன் யான் என்பேன். இருப்பவன், இல்லாதவன், பொய்
சொல்பவன், பொய் சொல்லாதவன், ஏழை, பணக்காரன், இவ்மதம், அவ்மதம் என்ற
வித்யாசம் எந்தனுக்கு இல்லை அப்பா. அனைத்தும் ஒன்றுதான் என்பேன். தவறு
செய்தானாலும் தன் பிள்ளையை ஏற்றுக்கொள்ளும் தாய் போல, அவ்வாறே அகத்தியனும்
தான்.
அடியவர்: எங்கோ கேள்விப்பட்டேன், இனி வரும் காலங்களில் சனியவனே, சந்திரனை சார்ந்து தான் வேலை செய்யும் என்று!
அகத்தியர்:
அதனால் தான் மனிதன் கூட பைத்தியக்காரன் போல் உளறுவான் என்பேன். அதனால்
தான் சந்திரனை நெருங்கி வந்த சனியவனை யான் சற்று தள்ளிவிட்டேன். இது போல்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இனி வரும் காலங்களில் மனிதனுக்கு பல
புதுமையான விஷயங்களை கற்று கொடுப்பேன். அப்பனே! இவை எல்லாவற்றையும்
சுவடிகளில் எழுதி வைத்துள்ளேன். ஆனால், காசுக்காக கைபற்றி
வெளிநாட்டவரிடம்......... விற்றுவிட்டார் அப்பா. அதனை கொண்டு புதுப் புது
விஷயங்களை கண்டு பிடித்து விட்டார்கள் அப்பா. அப்பனே! யாங்கள் செய்யாதது
இவ்வுலகத்தில் ஏதும் இல்லை அப்பா.
அப்பனே!
மனிதனாக பிறந்து விட்டாலே, குடும்பத்தில் பிரச்சினை வரும், நோய்கள் வரும்.
இவை எல்லாம் நீங்களே தீர்த்துக் கொள்ளவேண்டும். திருமணம் எப்பொழுது
நடக்கிறதோ, அப்பொழுதே பாபம் ஏறிவிட்டது என்று பொருள். ஏதன் மீது நீ ஆசை
கொள்கிறாயோ, அதன் வழி பாபத்தை ஏற்படுத்துவான் இறைவன். இப்படியே மனித
வாழ்க்கை முடிந்து விடுகின்றது. பின் எங்கப்பா, இறைவனை பற்றி யோசிப்பான்.
ஆகவே, திருமணம் என்பது கர்மா தான்.
மனிதன்
கோபப்பட்டால், உடல் வலுவிழந்து போகும். அப்பனே! கோபப்பட்டால் நீ அடைவது
என்ன? அப்பனே அழிவுதான் நிச்சயம். முக்கால் பங்கு அழிவு, கோபத்தினால் தான்
வருகிறது என்பேன். இதை யாரும் உணர்வதில்லை அப்பா. உண்மையான ஞானி
அறிவானப்பா. பக்தியில் இருந்து கொண்டே கோபபடுபவர் உண்டு. ஆதலால், அவனுக்கே
நோய்கள் வரும்.
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வேலை இருக்கின்றதப்பா. அதை தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள் அப்பா!
இனி வரும் காலங்களில், கூறப்படுவதை யார் யாரோ எடுத்து செல்வார்களப்பா. புத்தகமாக வெளியிடுவார்களப்பா.
குடும்பத்தில்
இருந்தும், கடமைகளை சரியாக செய்துவிட்டு சென்றால், முக்தி கிட்டும்.
திருமணம் செய்துவிட்டு, அனைவரையும் தவிக்கவிட்டு, கடமைகளை செய்யாமல்
சென்றால், அது தான் மிக கொடிய கர்மாவை ஒருவனுக்கு சேர்க்கும். திருமணம்
செய்த ஆண் அல்லது பெண்ணுக்கு ஆன்மீக உணர்வே இல்லை என்றால், அப்பொழுது அந்த
ஒருவருக்கு தெரியும், இவ்வுலகில் அனைத்தும் பொய் என்று. அப்போது தானாக
இறைவனிடம் வந்து தான் ஆகவேண்டும்.
இறைவனை
வணங்கினாலும் கர்மாவை அனுபவிக்கத்தான் வேண்டும் என்பதே பல ஞானிகளின்
வாழ்க்கை உணர்த்துகிறது. ரமண மஹரிஷியின் வாழ்வு அப்படிப்பட்டதுதான்.
அண்ணாமலையாரிடம் அருகில் இருந்தாலுமா?
அப்பனே!
இறைவன் நியாயமானவன். தன் பிள்ளையே தவறு செய்தாலும் தண்டனை கொடுப்பான்.
உடம்பை எடுத்துவிட்டால், கர்மாதான். அதேபோல் தான் மனிதன். தன் பிள்ளை தவறு
செய்தால், தண்டித்தால், வெற்றி என்பது அப்பிள்ளைக்கு நிச்சயம் உண்டு.
மனிதனின்
கட்டுப்பாடு கிரகங்கள் கையில் உள்ளது. ஆகவே, கிரகங்கள் விலகி வழிவிட்டால்
தான் இறைவனிடமே செல்ல முடியும். இறைவனை நெருங்க நெருங்க, கிரகங்கள்
தடுக்குமப்பா. அடித்து போடுமப்பா. அப்படியும் இறைவன் தான் வேண்டும் என்று
சென்றால், போய் தொலையட்டும் என்று விட்டுவிடும். அப்பொழுதுதான் உண்மையான
பக்தி பிறக்கும், உண்மையான ஞானம் பிறக்கும்.
தெய்வத்தின்
பெயரை வைத்துக்கொண்டு தவறு செய்கிறவனுக்கு கர்மா வேகமாக ஏறும். அதனால்
தான் அப்பா! "நாயினும் கடையேன்" என்று சொல்லிவிட்டான் அப்பா. புரிகின்றதா
அப்பா?
தெய்வத்துக்கும் எனக்கும் பூசை
செய்துவிட்டு, புண்ணியத்தை தெடிக் கொள்கிறேன் என்று, யானும் பார்த்துக்
கொண்டிருக்கின்றேன், "அகத்தியா எனக்கு இதை அருளேன், இதை கொடேன்!" என்று
வேண்டிக் கொள்கின்றனர். இறைவனுக்கும், அகத்தியனுக்கும், எதை எப்போது
கொடுக்க வேண்டும் என தெரியும் என்று உணர்வதே இல்லை.
அப்பனே! அனைத்தையும் உணர்ந்தவர்கள், சித்தர்கள்.
யான் தீபம் ஏற்ற சொன்னதே மற்றவர்களுக்காகத்தான்.
அடியவர்:
ஜோதிடம் பார்ப்பவனுக்கு கர்மா வந்து சேரும் என்று நீங்கள்
சொல்லிவிட்டீர்கள். இந்த ரகசியத்தை வேறு யாருமே இதுவரை சொன்னதில்லை,
நீங்கள்தான் முதலில் சொல்கிறீர்கள். இப்படிப்பட்ட கலையை ஏன் இறைவன்
பூமிக்கு கொண்டுவந்தார்? அதுவுமின்றி, சாதாரண மனிதரிடம் ஏன் இதை படிக்க
கொடுத்தார்?
அப்பனே! சொல்கின்றேன். முன்
காலங்களில் ஜாதகன் 48 நாட்கள் விரதமிருந்து பின்னர் தான் சோதிடனிடம் ஜாதகம்
பார்க்க போக வேண்டும். அதுமட்டும் அல்லாமல், நவகிரகங்களின் காயத்ரி
மந்திரத்தை உருவிட்டபடி, ஏதேனும் ஒரு உயிரினத்துக்கு தினமும் உணவளித்தபின்
செல்ல வேண்டும் அப்பா! அது மட்டும் இல்லாமல் நன் முறைகளாகவே தாய்
தந்தையரையும் மதித்து, குரு சொல்வதையும் கேட்க வேண்டும் அப்பனே! இவை
எல்லாம் முன்னரே செய்தபின்தான், ஜாதகத்துடன் செல்வார்கள் அப்பா. இதனால்,
சொல்பவனுக்கு நிச்சயம் கர்மா இல்லை அப்பா. இப்பொழுது அப்படியா நடக்கின்றது
அப்பா? அப்பனே கிரகங்கள் கூட, தர்மத்தை கடைபிடித்தால், அனைத்து
நன்மைகளையும் செய்யும் அப்பனே. இப்படித்தான் முன் காலங்களில் சொல்லிக்
கொண்டிருந்தார்கள் அப்பனே. இவைகளை எல்லாம் சொல்பவன் ஜாதகனிடம்
கூறவேண்டுமப்பா! இல்லாவிடில், அந்த ஜாதக தோஷ பலன், சொல்பவன் முதுகில்
ஏறுமப்பா. இப்பொழுதெல்லாம் காசுக்காக செய்கிறார்கள், சொல்கிறார்கள்.
போகட்டும் என்று விட்டு விடுகிறேன் நான்.
அகத்தியப் பெருமானுக்கு மிக்க நன்றி! விளக்கம் நிறைவு பெற்றது!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
No comments:
Post a Comment