"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, March 8, 2023

கடையத்தில் ஓர் கருணை விழா - முதல் தென்மண்டல சுத்த சன்மார்க்க மாநாடு - 12.03.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

மாசி மாத ஆயில்ய வழிபாடு, மாசி மக ஹோமத் திருவிழா, மாசி மக 10008 தீப வழிபாடு என அனைத்தும் மிக சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி பாபநாசம் சென்று அனைத்திலும் கலந்து கொண்டு ,அகத்திய அடியார்களை சந்தித்தது, ஒவ்வொரு இறை அனுபவம் என நம்மை குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் வழிநடத்தி வருவது கண்டு மனம்,மொழி,மெய்களால் வணங்கி மகிழ்கின்றோம்.

வள்ளலார் 200 விழாவினையொட்டி தென்காசி மாவட்டம் கடையத்தில் ஓர் கருணை விழா வருகின்ற 12.03.2023 அன்று முதல் தென்மண்டல சுத்த சன்மார்க்க மாநாடு நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான அழைப்பிதழை இன்றைய பதிவின் மூலம் பகிர விரும்புகின்றோம்.

மவுனகுரு ஆசிரமமும், அனைத்து வள்ளலார் சங்கங்களும் இணைந்து முன்னெடுப்பாக இந்த விழாவினை நடத்த உள்ளார்கள். அழைப்பிதழை பார்க்கும் முன்னர்  வள்ளலார் பற்றி சில செய்திகளை காண்போமா?

வள்ளலார் வருகையால் மடம் சங்கமானது. சத்திரம் சாலையானது. கோவில் சபையானது.இன்று தமிழகம் முழுதும் வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் சார்பில் பல இடங்களில் அன்னசேவை, அகவல் பாராயணம் என பல்வேறு வகைகளில் கொண்டாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. வள்ளலார் வாழும் சித்தர் ஆவார். மரணத்தை வென்ற மாபெரும் மகான் ஆவார். வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர். அன்னசேவையை அணையா அடுப்பு மூலம் ஆரம்பித்து வைத்தவர். எட்டும் இரண்டும் பற்றி பேசியவர். பெயருக்கு ஏற்றார் போல் வள்ளலாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர். ஆன்மிகத்திற்கும் மட்டும் அல்ல..அறத்திற்கும் வள்ளல். ஆன்மிகமே அன்னதானத்தில் தான் அடங்கி இருக்கின்றது, ஒரு வேளை வயிற்றிற்கு சோறிடாது என்ன தான் ஆன்மிகம், அறம் என்று உபதேசித்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் தான். வள்ளலார் என்று சொன்னாலே அன்னதானம் தான் நம் கண் முன் நிற்கின்றது. எத்துணை எத்துணை சான்றோர் பெருமக்கள் இன்றும் அந்த அறப்பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள். வள்ளலாரும் அவர் தம் மார்க்கமும் பற்றி பேசுவது பெருங்கடலில் சென்று ஒரே ஒரு நீர்த்துளியை எடுத்து பருகுவது போன்றதாகும்.



உலகில் தோன்றிய ஞானிகள்  அருளாளர்கள் சித்தர்கள் மற்றும் ஆன்மீக போதகர்கள் எல்லோரும் இறைவனைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று. மனிதர்களுக்கு மட்டும் நன்மை பயக்கும் வகையில் பலவிதமான ஆன்மீக போதனைகளையும் வாழ்க்கை முறைகளையும் எண்ணம் சொல் செயல் வழியாக அவரவர்களுக்கு தெரிந்த வகையில் தெரிவித்துள்ளார்கள். ஆனால் வள்ளலார் எல்லா உயிர்களும் இன்பம் அடைய வேண்டும் என்பதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும் 


வள்ளலார் பாடல்!

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்

ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.! 

என்னும் பாடல்வாயிலாக  தாவரம் முதல் மனிதர்கள்வரை  துன்பப் படுவதை சகிக்க முடியாமல் வாடினேன் இளைத்தேன்  உள்ளம் பதைத்தேன் துடித்தேன்  நடுக்குற்றேன் என்கிறார் அதுதான்  ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையாகும்  அதுவே வள்ளலாரின் தனிசிறப்பாகும்


வள்ளலார் பாடல்

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்

இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!

மேலே கண்ட பாடல் வாயிலாக வள்ளலார் தன்னை இறைவன் எதற்காக வருவிக்க உற்றார் என்ற விபரத்தை மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.வள்ளலார் வருவிக்க உற்ற நாளை சன்மார்க்கிகளாகிய நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி மகிழ்கிறோம் அது அவசியமானதுதான் வள்ளலார்  சொல்லியவாறு வாழ்க்கையில் நாம் கடைபிடிப்பதே அவருக்கு நாம் செய்யும் கைமாறாகும்

ஆன்மீகம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக கடவுளைப் பற்றியும் வழிபாடுபற்றியும் கடவுளிடத்தில் இருந்து அருளைப் பெறுவது பற்றியும் பேசிக் கொண்டே வருகிறது.மேலும் சிற்றின்பம் பற்றியும் பேரின்பம் பற்றியும் பேசாத அருளாளர்களே இல்லை என சொல்லலாம். மனித குலம் பரத்தில் சென்று அருளைப்பெற்று வாழ்வது சரியான முறையான வழிஅல்ல. இகத்தே  அதாவது இந்த பஞ்ச பூத உலகமாகிய இவ்வுலகிலே அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு வகையான வாழ்க்கை முறைகளில் தடம் மாறாமல் வாழ்ந்து பின்பு உலகப் பற்று அற்று இறைவனைத் தொடர்புகொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வதே இகத்தே பரத்தைப் பெற்று வாழும் வாழ்க்கையாகும் என்கிறார் வள்ளலார்.


இனி அழைப்பிதழை கீழே பகிர்ந்து உள்ளோம்.







மவுனகுரு ஆசிரமத்திற்கும் நமக்குமான தொடர்பு குருவருளால் கிடைத்தது. இணையத்தில் கிடைத்த தொடர்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தைப்பூச சேவையாக நம் தளம் சார்பில் அரிசி,பருப்பு போன்ற மளிகை பொருட்கள் கொடுக்கப் பணிக்கப்பட்டோம்.பின்னர் ஒரு முறை நேரில் சென்று மவுனகுரு ஆசிரமம் கண்டோம். மிக மிக அற்புதமாக அன்றைய சந்திப்பு இருந்தது. இயற்கை எழில் கொஞ்ச, பச்சைப் பசேலென தோரண மலை பின்புறத்தில் இருந்தது  ஆசிரமம். சல சல என்ற நீரோடை என அனைத்தும் மனதிற்கு இதமாக இருந்தது. ஆசிரமம் என்ற உடன் பெரிய அளவில் நாம் இங்கே எதிர்பார்க்க வேண்டாம். வள்ளலார் வழிபாடு செய்வதெற்கென ஒரு இடம் , அருகில் கட்டுமான வேலைப்பாடுடன் தங்குவதற்கென கட்டடம் கட்டிக் கொண்டு இருந்தார்கள். மூலிகை கஞ்சி கொடுத்தார்கள். பின்னர் வள்ளலார் வழிபாடு செய்து அங்கிருந்து அன்று விடை பெற்றோம். தற்போது கடையம் மட்டுமின்றி, கோவை,திருப்பூர் என மவுனகுரு ஆசிரமம் தன் கிளைகளை பரப்பி அன்னசேவையுடன், வள்ளலார் வழிபாடு , மருத்துவம் என்று அனைத்து சேவைகளும் செய்து வருகின்றார்கள்.

ஏற்கனவே கூறியது போல், மவுனகுரு ஆசிரமமும், அனைத்து வள்ளலார் சங்கங்களும் இணைந்து நடத்தும் முதல் தென்மண்டல சுத்த சன்மார்க்க மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு திருவருளும்,குருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி... - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_24.html

 உலகம் தழைக்க வந்துஉதித்த உருவே வருக! - திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post_4.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_5.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_25.html

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

No comments:

Post a Comment