"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, April 5, 2022

கூட்டுப் பிரார்த்தனை எனும் மகா சக்தி!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அனைவரும் புதிய தமிழ் புத்தாண்டு நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். பங்குனி மாத வழிபாடுகள் குருவருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த பங்குனி மாதத்தில் பல திருத்தலங்களில் திருவிழாக்கள் நம்மை இறை நோக்கி நகர வைத்து வருகின்றது. பிறக்கும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இது ஒரு புறமிருக்க, இந்த சித்திரை மாதத்தில் வெயில் தாக்கம் இப்போதே ஆரம்பித்து விட்டது. எனவே அன்பர்கள் தத்தம் இல்லங்களில், வாய்ப்பு கிடைக்கும் போது குடிநீர், நீர் மோர் தானம் போன்றவற்றை சிரமேற்கொண்டு செய்ய வேண்டுகின்றோம். நாமும் குருவருளால் நம் தளம் சார்பில் நீர் மோர் தானம் இன்னும் சில தினங்களில் தொடர உள்ளோம். அடுத்து கூட்டுப் பிரார்த்தனை பற்றி பேச விரும்புகின்றோம்.

இன்றைய காலகட்டத்தில் கூட்டுப்பிரார்தனை ஒன்றே எளிய வழி. தினமும் ஒரு 30 நிமிடமாவது வழிபாடு செய்யுங்கள். உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நாம் நம் குழு நண்பர்களோடு தினமும் சுமார் 30 நிமிடம் திருவாசகம் போன்ற தமிழ் திருமுறைகளை ஓதி..இல்லை இல்லை...படித்து பிரார்த்தனை செய்து வருகின்றோம். இன்றைய பதிவில் சில பிரார்த்தனை செய்திகளை இங்கே பதிவிடுகின்றோம். அன்பர்கள் தினமும் படித்து பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகின்றோம். 



பிரார்த்தனை 1:

ஸ்ரீ அகத்திய பெருமானே ! அற வொழுக்கதொடு வாழ வேண்டும். நான் செய்த கொலை கருமங்களிலிருந்து எம்மை காப்பாற்றுவாயாக!

நான் இனி நினைக்கும் மனம்,மெய்,மொழி இம்மூன்றில் அடங்கி உள்ள 10 தீய குணங்களில் இருந்து காப்பாயாக ! முறையே  எதையும் விரும்புதல்,காமப் பற்று, கொலை செய்ய நினைத்தல்,பொய்யுரைத்தல்,கோள் சொல்லல்,சினந்து பேசுதல்,பயனில் கூறல், களவாடுதல்,வீணாக தொழில் புரிதல்,கொலை செய்தல் ஆகியவற்றை அறவே நீக்கிட வேண்டும். தீயவருடன் சேராமல் விலகி இருத்தல்  வேண்டும்.உத்தம குணமுடையோருடன் இணைந்து நேசித்து வாழ வேண்டும்.எனது வருவாய்க்கேற்ப வறுமைப்பிணி,மனத்துயரம் இவற்றால்  வருந்துவோரையும், இறப்பவரையும் ஆதரித்தும்,தீயவர்க்கும்,நல்லவர்க்கும்,பகைவர்க்கும், நன்மையே புரிந்து குணம் அடைய வேண்டும்.


பிரார்த்தனை 2:

இறைவனே.! அகத்தீசனே! என்னை பாவ மன்னிப்பு கோருபவர்களில் ஒருவனாக ஆக்குவாயாக. இன்னும் பரிசுத்தமுடையவர்களில் ஒருவனாக ஆக்குவாயாக.உன்னுடைய உத்தம அகத்திய அடியார்களில் ஒருவனாக ஆக்குவாயாக. நீவீர்  மிகத் தூய்மையானவர் 

அகத்தியனே! நான் உன் புகழைக் கூறுகின்றேன். என்றும் எமது வேண்டுதலுக்குரிய தலைவனே! எமக்கு உம்மைத் தவிர வேறு யாருமில்லை. உன்னிடம் எம் கர்மவினை தீர பாவ மன்னிப்பு கோருகின்றேன்.சமாதானம் அனைவர் மீதும் உண்டாவதாகுக. எல்லாப் புகழும் சர்வேஸ்வரனான அகத்தீஸ்வரனுக்கே உரியதாகுக!


பிரார்த்தனை 3:

அகத்தீசனே ! உம்மை பிரம்ம முகூர்த்தத்திலே தொழுவது தூக்கத்தை விட சிறந்ததாகும்.வெற்றி ஒருவர் பெற வேண்டுமெனில் உன் நாம  ஜெபம் ஒன்றே தாரக மந்திரமாகும்.ஏன் எனில் நீர்! மெய்யே உரைத்தீர்.தவம் செய்தீர். சத்தியத்தை பகன்றீர்.எங்கள் புனித அழைப்பிற்கு  நிலைப்பாடான வேண்டுதலுக்கு உடையவரே. உயர்நிலையில் எங்களை உயர்த்தி அருள்வீராக! நிச்சயமாக நீரே..எங்களை காப்பாற்றி அருள்வீராக.

அகத்தீசனே! நாங்கள் நிச்சயமாக உன்னிடமே உதவி தேடுகின்றோம்.உன்னிடமே பாவ மன்னிப்பு கோருகின்றோம்.உன்னைக் கொண்டே நம்பிக்கை கொள்கின்றோம்.உன்னிடமே பொறுப்பு வைக்கின்றோம். நன்மைக்காகவே உன்னையே தொழுகின்றோம்.உமக்கு நன்றி செலுத்துகின்றோம். எனவே உமக்கு மாறுபாடு செய்ய மாட்டோம்.உமக்கு பாபம் செய்கிறவனை விட்டு ஒதுங்கிக் கொண்டு விடுகிறோம். என்றும்  அகத்தீசனே!  நாங்கள் உன்னையே வணங்குகிறோம்.தலை தாழ்ந்து பணிதல் செய்கின்றோம். உம்மிடமே நாங்கள் அன்பு செலுத்த விழைகிறோம்.வழிபட்டு நடக்கின்றோம்.அனைத்து துன்பத்திலிருந்து இந்த அகிலத்தை காத்திட வேண்டும்.




பொதுப் பிரார்த்தனை:

அப்பனே அகத்திய பெருமானே! ஆதி மகாலட்சுமி அருளால் சன்மார்க்கத்தில் நிற்கும் அன்பர்களுக்கு அருட் செல்வம்,பொருட் செல்வம் கிட்ட ஆசி புரிய வேண்டுகிறோம்.

ஆதி பராசக்தியே, உமையொரு பாகனாக நின்ற எங்கள் அன்னையே திருமணத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கும் சன்மார்க்க அன்பர்களுக்கு மனமொத்த மங்கை / மணாளன் அமைய வேண்டுகிறோம்.

இகபர சுகமளிக்கும் ஈசனே,குழந்தை வரம் வேண்டி ஏங்கி நிற்கும் அன்பர்களுக்கு சித்தர்கள், ஞானியர், சன்மார்க்கத்தை விரும்பும் குழந்தைகள் பிறக்க வேண்டுகிறோம்.

உணவு மற்றும் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் பல்கி பெருக மழைக் கடவுளான இந்திராணி சமேத இந்திரரையும்,வாருணி சமேத வருணரையும் வேண்டுகிறோம்.

எட்டா கனி போல் இருக்கும் சித்தர்களின் மாமறை மீண்டும் வெளிப்பட வேண்டுகிறோம்.

ஏழாம் பாவத்தால்,மன சஞ்சலத்தில் இருக்கும் சன்மார்க அன்பர்களின் மனக்குறை தீர வேண்டும்.

ஐவகை நிலங்களில் இயற்கை வளங்கள் அன்னை பூமாதேவி  மற்றும் ஆதிசேசன் அருளால் பெருக வேண்டும்.

ஒப்பற்ற மெய்ஞானம் உலகெங்கும் பரவ வேண்டும்.

ஓங்கார சொருபமான ஞான ஸ்கந்தரின் அருளால் சன்மார்க அன்பர்களுக்கு நாதம் பெருக வேண்டும்.

ஔஷதங்கள் சித்தர்களின் கருணையால் மீண்டும் பொலிவு பெற வேண்டுகிறோம்.



என் உடல் என்னும் பம்பரத்தில்

உயிர் என்னும் கயிற்றைக் கட்டி

வினை என்னும் ஆட்டக்காரன்

ஆட்டுவிக்கிறான்


இறைவா எம்பிரானே அகத்தீசா

வினை அறுக்க உன்னையே சரணடைந்தேன்

போற்றினால் உனது வினை அகலுமப்பா

போற்றினால் பூரணமும் கூடப்பேசும்


என்று சொன்னவனும் நீ தானே

ஆகவே உன்னையே சரணடைந்தேன்

நான் விடுகின்ற மூச்சும் நீயே

என் உடலும் நீயே உயிரும் நீயே


கூட்டுவிப்பவனும் நீயே குலைவிப்பவனும் நீயே

ஆட்டுவிப்பவனும் நீயே பெருமானே

இனி பிறப்பு வேண்டாம் எங்களுக்கு

ஒரு வேளை பிறப்பு இருக்குமானால்


அப்பிறப்பில் உனக்கு தொண்டு செய்யும்

பாக்கியத்தைக் கொடுத்தருள்வாயாக அகத்தீசா!



என்றும் குருவின் பாதம் சரணம். இங்கே தொகுத்து கொடுத்துள்ள பிரார்த்தனைகளை தினமும் வழிபாட்டில் இணைத்து குருவின் பதம் சரண் அடைவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

தவமா? கூட்டுப்பிரார்த்தனையா? - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_14.html

No comments:

Post a Comment