"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, January 17, 2026

குருநாதர் உரைத்த தை அமாவாசை வழிபாடு

                                               இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

        சர்வம் சிவார்ப்பணம்...   









அம்மையே!!!, அப்பனே!!, அனைவருக்கும் எதை என்று புரிய, நிச்சயம் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆன்மாக்களை நிச்சயம் முழுமையாக எதை என்று அறிய, பின் ஆற்று தன்னில் (ஆற்றில் )விட வேண்டும்.

 அறிந்தும் இதையென்று  நிச்சயம் இவை தன் விலக்க, அறிந்தும் கூட அமாவாசையிலும் கூட நிச்சயம் உடம்பிலிருந்து எதை என்று அறிய, எவை என்று புரிய, சிறிது பின் இளகி இருக்கும்.

 அவ் நேரத்தில் நிச்சயம் நதிகளுக்கும் சென்று எதை என்று புரிய.

 இன்னும் அதாவது கடல் நீர் அருகில் பின் சென்றும் நிச்சயம் அறிந்தும் எவை என்று அறிய, பின் பல தூப எண்ணெயைகளில் கூட
(சாம்பிராணி தைலம் உள்பட )
 கூட அறிந்தும் கூட பல பல வித்தியாசமான பழங்களை நிச்சயம் எவ்வாறாக கீறி, அதாவது எதை என்று புரிய. 

அப்படியே குழுவி போல் எதை என்று அறிந்து கூட, அதில் பின் எண்ணெயை இட்டு, நிச்சயம் தீபத்தை ஏற்றி, சில சில வழிகளில் மூலிகைகளை  இட்டு, அதை அப்படியே நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூட அனுப்ப வேண்டும்.

(உதாரணத்திற்கு எலுமிச்சம் பழத்தில் தீபம் போடுவது போல பல வித்தியாசமான பழங்களில் அதாவது ஆப்பிள் ஆரஞ்சு இன்னும் பல்வேறு பழங்களில் பழத்தை இரண்டாக வெட்டி பழங்களின் நடுவே குழியாக்கி அதில் எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும் அதை அப்படியே ஆற்றில் அல்லது கடலில் விட வேண்டும்)

 இதற்கு மந்திரமும் யான் சொல்வேன்.

நிச்சயம் இதற்கு தகுந்தார் போல் பின் அனைத்தும் ஈர்க்கும் திறன், ஈர்க்கும் திறன், பூசணி தன்னில் கூட உள்ளது.

(வெள்ளை பூசணி.. ஏற்கனவே வெள்ளை பூசணியில் காலபைரவருக்கு தீபம் ஏற்றுவதை அனைவரும் அறிந்திருக்கலாம்)

 அவை தன் அனைத்தும் எதை என்று அறிய அறிய எடுத்து, அதில் எண்ணெய் இட்டு, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. பின் அப்படியே பின் எவை என்று கூட அறிந்தும் கூட. 

அறிந்தும் புரிந்தும், அப்படி நிச்சயம் தன்னில் கூட பிடுங்கிச் செல்லும் என்பேன். ஒவ்வொன்றாக
 ஈர்ப்பு விசையினாக.

  அறிந்தும் இவை தொடர்ந்து செய்ய வேண்டும். ஏனென்றால் ஒரே நேரத்தில் அனைத்தும் விலக எதை என்று புரிய. 

(ஒருமுறை மட்டும் செய்யக்கூடாது அதாவது ஒரு அமாவாசை மட்டும் செய்யக்கூடாது தொடர்ந்து செய்ய வேண்டும் ஏனென்றால் ஒரே அடியாக ஒரே நேரத்தில் முன்னோர்களின் ஆத்மாக்களை அணுக்களை விலக வைக்க முடியாது அதனால் இதைத் தொடர்ந்து செய்து கொண்டே வர வேண்டும்)

 அறிந்தும் அனைவரும் சொல்லுங்கள், இவை தன் ஒருவருக்கு தெரிவித்தால் எதை என்று அறிய, நீங்களும் பின் அதாவது இறைவன் கூட சுயநலவாதி ஆகிவிட்டான் என்று சொல்வீர்கள்.

(இந்த வழிமுறையை தனிப்பட்ட நபர்களுக்கு சொன்னால் அவர்கள் மட்டுமே பயன்பெறுவார்கள்!!
இதனால் இறைவன் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டும் சொல்வதால் இறைவனுக்கு இங்கு சுயநலவாதி என்ற பெயர் ஏற்பட்டுவிடும் அனைவருக்கும் தெரிவித்தால் அனைவரும் செய்வார்கள் அனைவரும் பயன்பெறுவார்கள்)

 அனைவருக்கும் இதனால் அனைவருக்கும் தெரிவித்து விட்டால்!!!

(இந்த வாக்கினை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் அனைவரும் இதனால் பயன்பெறுவார்கள்)

. அப்பனே, அறிந்தும் கூட இதை தடுப்பதற்கும் பல ஆட்கள் எதை என்று அறிய, எவை என்று அறிய, அறிய புரியாதவர்கள்.

 ஏனென்றால் நல்லது செய்தால், நிச்சயம் தடுப்பவர்கள்.!!

 ஏனென்றால் இக்கலியுகத்தில் தீயவை தான் நடக்க வேண்டும் என்று விதி.

 அறிந்தும் எவை என்று அறிய, பின் அதாவது !!!

ஈசன் மிக மிக கருணை படைத்தவன்.

 பின் இக்கலியவனுக்கும் எதை என்று அறிய!!!, ஈசனை வேண்டிக்கொண்டே, ஈசனை வேண்டிக்கொண்டு பல நூறு கோடி, எதை என்று அறிய, எவை என்று அறிய, ஈசனையே நமச்சிவாய, நமச்சிவாய என்று.!!


அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

No comments:

Post a Comment