அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நேற்று மூன்றாம் பிறை தரிசனம் அனைவரும் பெற்று இருப்பீர்கள் என்று விரும்புகின்றோம். இன்றைய பதிவில் ஸ்ரீஅகத்தியர் ஞானம் பற்றி சிறிது சிந்திக்க உள்ளோம். இதனை ஸ்ரீஅகத்தியர் உபதேசமாக கூட நாம் எடுத்துக் கொள்ளலாம். முதலில் ஞானம் என்றால் என்ன? இது தான் மிக மிக உயர்ந்த நிலை. நாம் தற்போது ஆன்மிகத்தில் அரிச்சுவடி படித்துக் கொண்டு இருக்கின்றோம். இதில் பக்தி என்ற நிலை தான் முதலில் கைக்கொள்கின்றோம். இங்கிருந்து தான் நாம் ஞானம் நோக்கி செல்ல வேண்டும். பக்தியின் உச்சம் ஞானம் என்று சொல்லலாம். ஞானத்திற்கு அடிப்படை என்றால் அது அன்பு மட்டும் தான். அன்பில் இருந்து தான் அகத்தியமும் தோன்றுகின்றது. இன்ப ஊற்றான இறைவனை தரிசிக்க வேண்டும் என்றால் அது அன்பால் தான் முடியும்.இதனை தான் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் முதல் கொண்டு அனைத்து சித்தர்களும் போதித்து வருகின்றார்கள். இதனை தான் அனைத்து அருளாளர்களும் கூறி வருகின்றார்கள்.
இன்னொரு வழியில் பார்த்தால் ஞானம் என்பது எப்போது கிடைக்கும்? பெறுவதிலா? கொடுப்பதிலா? கொடுப்பதில் தான் என்று கூற முடியும். இது நாள் வரை நாம் பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் பெறுவதில் என்ன பயன்? இன்னும் இன்னும் நாம் பக்குவப்படவில்லையே. ஆனால் கொடுத்து பாருங்கள். கொடுப்பதற்கு அருள் வேண்டும். இந்த அருளிற்கு அன்பு வேண்டும். எனவே கொடுப்பதற்கு அன்பு தான் தேவை. அன்பு இருக்குமிடத்தில் தான் கொடுக்கும் எண்ணம் வரும். இன்று நாம் பார்க்கும் பற்பல சேவைகள் அனைத்தும் அன்பில் இருந்து தான் பிறக்கின்றது. எனவே தான் மீண்டும் மீண்டும் அன்பு தான் ஞானதின் அடிப்படை என்று சொல்கின்றோம்.
இந்த அன்பின் வலைப்பின்னலில் தான் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவும் இயங்கி வருகின்றது. பற்பல வழிகளில் குருவருளால் கொடுத்து வருகின்றோம். வழக்கமான நம் தள சேவைகளை தொடர்ந்து வருகின்றோம். இம்முறை குருவருளால் 1000 கிலோ அரிசி வாங்கி அதனை பல ஆன்மிக அமைப்புகளுக்கு 100கி என பிரித்து கொடுத்துளோம். இவை அனைத்தும் உங்களால் தான் சாத்தியம். அடுத்து ஊரப்பாகத்தில் சுமார் 10 அன்பர்களுக்கு அன்னசேவை ஒரு நாள் செய்துள்ளோம். கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் பாதத்தில் என்றும் அவர் பதம் பற்றிட, லோக ஷேமத்திற்காக தீபமேற்றி வழிபாடு செய்துள்ளோம். தரிசன காட்சிகளை இங்கே பகிர்கின்றோம்.
மீண்டும் நம்மை நாமே திருத்திக் கொள்ள இறை கொடுத்த வாய்ப்பை தவற விட வேண்டாம்.
1. குருவின் பாதம் பிடியுங்கள்
2. கல்கண்டு தீபம் ஏற்றுங்கள். ( கல்கண்டு,ஏலக்காய்,கிராம்பு பொடி செய்து விளக்கில் சேர்க்க)
3. நமக்கு கிடைத்து வரும் ஒவ்வொரு நாளுக்கும் நன்றி சொல்லுங்கள்
4. ஒவ்வொரு நாளும் ஒரு உயிருக்கு உதவி செய்ய விரும்புங்கள்
5. தினசரி மாலை 6-7 மணி அனைவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்
6. ஆரோக்யத்தை மேம்படுத்த உடற்பயிற்சி, யோகா என செய்யுங்கள்
7. கண்டிப்பாக சைவ உணவை கடைபிடியுங்கள். சைவ உணவு கொண்டு செய்யும் வழிபாடு,பரிகாரம் மட்டுமே பலனைத் தரும்.
No comments:
Post a Comment