"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, August 14, 2026

சித்தன் அருள் - 1659 - கருட பஞ்சமி & நாக பஞ்சமி வழிபாடு - ஆகஸ்ட் 17, 2026

                        இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!


இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!


இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்









ஓம் அகத்தீசாய நம! அகத்திய பெருமான் ஜீவநாடி வாக்கு!

கருட பஞ்சமி நாக பஞ்சமி வழிபாட்டு முறை & அதன் பலன்

சித்தன் அருள் - 1659 அப்பனே தயிர் சாதத்தையும் பல வகையான பிரசாதங்களையும் வாழைப்பழம், எலுமிச்சை சாதத்தையும் கருட பகவானுக்கு ஈந்து பாலையும் அவன் மேல் ஊற்றி,
சப்த கன்னிகைகளுக்கும் பாலை ஊற்றி ஆசிகள் பெற்று வந்தாலே போதுமானது. அவை மட்டும் இல்லாமல் பின்னிக் கொண்டிருக்கும் நாகங்களை கூட வணங்கி, அவர்களுக்கும் பாலை ஊற்றி உடுக்க ஆடைகளையும் (வஸ்திரங்கள்) கொடுக்க நன்று என்பேன் அப்பனே. அனைவருமே செய்ய வேண்டும். செப்பி விட்டேன்.மனக்குழப்பங்கள் மாறும் அப்பா. அனைவருக்குமே இதை தெரிவித்து விடு.



அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

No comments:

Post a Comment