இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் ...இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
47. குருவே, சரணம். தாங்கள் அருளிய மகாசிவராத்திரி வழிபாட்டை, மாத சிவராத்திரி வழிபாட்டில் தொடரலாமா, ஐயனே?
குருநாதர்: எல்லாம் எதை என்று கூற, அனைத்தும் பின் அன்பே. இதனால், அன்புடன் நிச்சயம் செய்யும் காரியத்தை, இறைவன் ஏற்றுக் கொள்வான். நிச்சயம், எம்முடைய ஆசிகள் பரிபூரணம். அப்போ இல்ல, மாத சிவராத்திரியும் பண்ணலாம்.
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.



.jpeg)
.jpg)
No comments:
Post a Comment